குடல் சரியும் அளவிற்கு தாக்கிய போலிசார் சஸ்பெண்டு!

நரேஷ்.என்,
உறவினரை வழியனுப்ப ரயில் நீலையம் வந்தவரை காட்டுமிராண்டி தனமாக தாக்கி குரல் சரியும் அளவிற்கு அராஜகம் செய்த இரண்டு போலிசார் செஸ்பெண்டு செய்யப்பட்டனர். சில தினங்களுக்கு முன் பீகார், சீதாமாரி மாவட்டத்தில் உள்ள பூப்ரி ரயில் நிலையத்தில் மும்பைக்கு செல்லும் கர்மபூமி விரைவு ரெயிலில் உறவினரை ஏற்றி விடுதற்காக முகமது பர்கான் என்ற 25 வயது இளைஞர் வந்துள்ளார்.
ரயில் நிலையம் வந்து நின்றதும் முன்பதிவில்லாத பெட்டிகளில் ஏறி சீட் பிடிப்பதற்கு அங்கு கூடிருந்த பயணிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கூட்டநெரிசலைக் கட்டுப்படுத்த அங்கு வந்த ரெயில்வே போலீஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் பயணிகள் மீது தடியடி நடத்தத்தொடங்கினர். அப்போது அங்கு நின்றிருந்த முகமது பர்கானை கான்ஸ்டபிள்கள் இருவரும் சரமாரியாக லத்தியால் தாக்கினர்.
பார்கானின் வயிற்றில் பலமுறை அவர்கள் அடித்த நிலையில், அவரது குடல் வெளியே வந்தது. சில நாட்களுக்கு முன்பே பர்கானுக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை நடந்துள்ளதால் காவலர்கள் அடித்ததில் அவரது குடல் தையல் வழியாக வெளியே வந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து பர்கான் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே எஸ்.பி உட்பட இரண்டு கான்ஸ்டபிள்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பர்கான் தாக்கப்பட்ட சம்பவத்தை குறித்து இணையவாசிகள் கண்டனங்களை வெளியிட்டதுடன், அவர்களை சஸ்பெண்டு செய்தது போதாதும் டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்று தெரிவித்து வருக்கிறார்கள்.
????Warning Graphic???? A Muslim youth Furkhan who had went to see off his friend on Pupri railway station was brutally beaten by GRP jawans that his stomach burst open and intestine spilled out #GraphicContent
— Rafael Trujillo ???????? (@haitiansRdirty) July 26, 2024
pic.twitter.com/LrRRFzr3tL