சிறந்த காவல் நிலையமாக இராணிப்பேட்டை தேர்வு! இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதியிடம் கோப்பையை வழங்கிய டிஜிபி!

ம.பா.கெஜராஜ்,
சிறந்த காவல் நிலையங்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் கோப்பை பெற்ற இராணிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் பார்த்தசாரதியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
தமிழ்நாடு அரசு மாவட்ட/மாநகர அளவிலான சிறந்த காவல் நிலையங்களை தேர்வு செய்து தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்திற்கான விருது 2022 வழங்கியது. அதில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் இராணிப்பேட்டை காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், 22.07.2024 தேதி தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்/படைத்தலைவர் திரு.சங்கர் ஜூவால் இ.கா.ப. அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்திற்கான விருது 2022 ஐ இராணிப்பேட்டை ஆய்வாளர் திரு.பார்த்தசாரதி அவர்களுக்கு வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரின் கோப்பையை பெற்ற ராணிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.டி.வி. கிரண் ஸ்ருதி இ.கா.ப., பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
இதேபோன்று எப்போதும் சிறந்து விளங்க வேண்டும் என்று எஸ்.பி. வாழ்த்தினார். உடன் ராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு தனிப்பிரிவு ஆய்வாளர் அருண்குமார் மற்றும் இராணிப்பேட்டை உதவி ஆய்வாளர் அண்ணாமலை ஆகியோர்கள் இருந்தனர்.