திவாரூரில் பூகம்பம் ஆய்வு!

க.பாலகுரு,
ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு படையின் சார்பில் பேரிடர் இடிபாடுகளில் சிக்கிய பொதுமக்களை காப்பாற்றுவது, பூகம்பம் குறித்து ஆய்வறிக்கை தயாரித்தல் குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூர் வசோ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரக்கோணம் பகுதியில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படை சார்பில் உதவி கமாண்டன்ட் ஸ்ரீதர் தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர் மழை, புயல் ,பூகம்பம் போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பது குறித்து மாணவர்கள் மத்தியில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கட்டிடங்களில் இருந்து தீயணைப்புத்துறை மூலமாக முதல் கட்ட மீட்பு செய்வது குறித்தும் கட்டிடங்கள் இடிந்த நிலையில் கயிறு வழியாக பாதுகாப்பான முறையில் மீட்பது குறித்தும் அவர்களை முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது எப்படி என மாணவர்கள் மத்தியில் ஒத்திகை நிகழ்ச்சி பரபரப்பாக நடத்தப்பட்டது .
மேலும் திருவாரூர் மாவட்டத்தில் மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற பேரிடர் பாதிக்கக்கூடிய இடங்களை கண்டறிந்து மாவட்ட ஆட்சியருக்கு வரும் 28ஆம் தேதி அறிக்கையும் அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் சௌமியா, வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் பரஞ்ஜோதி,மன்டல துனை வட்டாட்சியர் இளங்கோவன்,பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.