ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ரூட் போட்டுக் கொடுத்த ஆள்காட்டி பிரதீப்!

ம.பா.கெஜராஜ்,
பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், அதற்கு பிரதீப் என்பவன் தான் சரியான ரோட் போட்டுக் கொடுத்தானாம் இந்த வழக்கு தொடர்பாக 17 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
கொலைக்காக ரூ.1 கோடி வரை பணம் கைமாறிய விவகாரமும் வெளியானது. கொலையாளிகள், பணத்தை கைமாற்றியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், திரை மறைவிலிருந்து மூளையாகச் செயல்பட்டு, திட்டமிட்டு, பணம் மற்றும் சட்ட உதவி செய்தவர்கள் யார் என்பதைக் கண்டறிய புலனாய்வு முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதையடுத்துகைது செய்யப்பட்டோர எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது.
அப்படியிருக்க தற்போது கைது செய்யப்பட்ட பிரதீப் தான் ஆம்ஸ்ட்ராங்கின் நடமாட்டத்தை உன்னிப்பாகக் கவனித்து தகவல்தெரிவித்து வந்துள்ளார். குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் புதிதாக கட்டி வரும் பெரம்பூரில் உள்ள வீட்டை எப்போது பார்க்க வருவார், எந்த இடத்தில் நின்றவாறு மேற்பார்வை செய்வார், அவருடன் யார் யார் வருவார்கள், துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்திருப்பாரா போன்ற ரகசிய உளவுத் தகவல்களையும் தெரிவித்து வந்துள்ளார்.
பிரதீப் கொடுத்த துல்லியமான தகவல்கள் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ரூட் கொடுத்திருக்கிறது.
இவன் கொல்லப்பட்ட ஆற்காடு சுரேஷ்க்கு உறவினராம்.