தன்னை வெட்ட வந்த மகனிடம் தப்பிய தந்தை:- மகனை போட்டு தள்ளினார்!

சபரி.ஈஸ்வரன்
அப்பாவை கொலை செய்ய முயன்ற மகன் அவரது தந்தையாலேயே கொலை செய்யப்பட்டார்.
இது பற்றின விவரம் வருமாறு,
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள காட்டுராமன்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ்(53) பெயிண்டர் வேலை செய்து வருகிறார்.
இவருக்கு மூன்று மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவருடைய இளைய மகன் முத்துக்குமார் (26). இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும் முத்துக்குமார் மது அருந்திவிட்டு அடிக்கடி வீட்டிற்கு வந்து தகராறு செய்வது வழக்கம்.
அப்படியிருக்க, கடந்த வெள்ளிக்கிழமை இரவும் வழக்கம் போல மது அருந்தி விட்டு வந்த முத்துக்குமார், மேலும் சரக்கடிக்க அவரது தந்தையிடம் தகராறு செய்தார். முத்துராஜ் தர மறுக்கவே, ஆத்திரமடைந்த முத்துக்குமார் தான் வைத்திருந்த அரிவாளை கொண்டு தந்தையை வெட்ட முயன்றார்.
உஷாரான முத்துராஜ் தன் மகனை கீழே தள்ளிவிட்டு அவர் வைத்திருந்த அறிவாளால் மகனை வெட்டி விட்டு தப்பியோடிவிட்டார்.
கழுத்து பகுதியில் வெட்டுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் முத்துக்குமார் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் மற்றும் நாலாட்டின்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மகனை கொலை செய்து விட்டு தலைமறைவாக உள்ள முத்துராஜை போலீசார் தேடி வருகின்றனர்.