லவ் டார்ச்சர் கொடுத்த புள்ளிங்கோஸ் அரெஸ்ட்!

ஜி.கே.சேகரன்,
போக்சோவில் 2 வாலிபர்கள் கைது 10ஆம் வகுப்பு மாணவிக்கு காதலிக்க சொல்லி காதல் தொல்லை (லவ் டார்ச்சர்) கொடுத்த வாலிபர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரை போக்சோ சட்டத்தில் மகளிர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்...
இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பணாவரம் அருகே உள்ள பெரப்பேரியை சேர்ந்த 16 வயது மாணவி பாணாவரம் அருகே மகேந்திரவாடி அரசு மேல் நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவருடைய மகன் திலகு (19). மகேந்திரவாடி பள்ளி மாணவிக்கு தொடர்ந்து காதல் தொல்லை (லவ் டார்ச்சர்) கொடுத்துள்ளார். அந்த மாணவி திலகுவை வெறுத்து ஒதுக்கிய போதும் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
மேலும் அதே பள்ளியில் படிக்கும் தனது தங்கையையும் திலகு தனது காதலுக்கு தூது விட்டுள்ளார். அப்போதும் மாணவி அவனை வெறுத்துள்ளார்.
தொடர்ந்து திலகு அந்த மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகின்றது ..இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் மாணவியை அழைத்துக் கொண்டு அவரது தந்தை திருமணி சென்ற போது திலகு, அவரது நண்பர் செல்வராஜ் ஆகியோர் தாங்கள் வந்த பைக்கில் திருமணியை இடிப்பதுபோன்று சென்று மாணவியை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் அந்த ரோமியோக்களுக்கு பாடம் புகட்ட எண்ணினார்.
இதுகுறித்து அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தாய் மஞ்சுமாதா புகார் கொடுத்தார். புகாரின் பேரில் விசாரனை நடத்திய காவல்நிலைய ஆய்வாளர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த திலகு மற்றும் திலகு - க்கு உடந்தையாக இருந்த அதே பகுதியை சேர்நத அவருடைய நண்பர் செல்வராஜ்(24) ஆகியோரை அரக்கோணம் அனைத்து மகளீர் காவல்துறையினார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதுபோன்ற ரோடு சைடு ரோமியோக்களால் பாதிக்கப்படும் மாணவிகளின் பெற்றோர்கள் புகார் செய்தால் தான் அவர்களை உடனுக்குடன் தண்டிக்க முடியும், மாணவிகளின் மீதான குற்றங்களும் குறையும் என அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.