கிரைம் ஸ்பாட்டாக மாறிய திருவண்ணாமலை! திமுக பிரமுகர் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

கிரைம் ஸ்பாட்டாக மாறிய திருவண்ணாமலை! திமுக பிரமுகர் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

 ம.பா.கெஜராஜ்,

 திருவண்ணாமலை மாவட்டம் வர வர கிரைம் ஸ்பாட்டாக மாறி வருகிறது. அதற்கு மாவட்ட அளவிளான காவல் அதிகாரிகளே காரணம் என்று கூறப்படுகிறது.

 இது பற்றின விவரம் வருமாறு,

 திமுக தொண்டர் அணி நகர துணை அமைப்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு கார் தீயில் எரிந்து சேதம்.

 திருவண்ணாமலை நகரில் உள்ள கரையான்செட்டி தெருவில் வசித்து வரும் சங்கர் என்பவர் வீட்டின் மீது முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியிருக்கிறார்கள்.

 வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் எறிந்து கொண்டிருந்த சத்தம் கேட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் வெளியே வந்து பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

   உடனடியாக தீயை தண்ணீர் ஊற்றி அனைத்துள்ளனர். முன்விரோதம் காரணமாக வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுள்ளது.

  கரையான்செட்டி தெருவில் வசித்துவரும் சங்கர் திமுகவில் திருவண்ணாமலை நகர துணை அமைப்பாளராக பதவி வகித்து கொண்டு பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இதில் முன்விரோதம் காரணமாக நள்ளிரவு ஒரு மணி அளவில் மர்ம நபர்கள் இவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு தப்பி சென்றுள்ளனர்.

   நள்ளிரவு சரியாக ஒரு மணி அளவில் இரண்டு நபர்கள் சங்கர் வீட்டின் முன்பு வந்து பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடும் சிசிடிவி வீடியோ பதிவாகி தற்போது இந்த வீடியோவும் வெளியாகி உள்ளது. நள்ளிரவு ஒரு மணி அளவில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   கடந்த 12ம் தேதி நள்ளிரவு திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு இடங்களில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் 75 இலட்சம் பணம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது திமுக பிரமுகர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் மேலும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.