அம்மா வலிக்குதே...!  ஓட்டுநரையும் கிளினரையும் கட்டி வைத்து தாக்கிய காட்டுமிராண்டி ஆம்னி உரிமையாளர்!

 ஆ.ஜோ,

 தென் மாவட்டத்தில் இருந்து திருப்பதிக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளில் ஆர்.பி.டி. கம்பெனி பிரபலமானது. மதுரை மாட்டுத்தாவணியில் இதன் அலுவலகம் உள்ளது. அதன் உரிமையாளரின் பெயர் ராஜசேகர். இந்த ஆம்னி கம்பெனியில் ஓட்டுநராக பாலக்கருப்பையா என்பவரும், அவருடன் கிளீனரும், மாற்று ஓட்டுநர் ஜோசப்பும் பணியாற்றி வந்தனர்.

  இந்த பேருந்தில் பயணிக்க ஆன்லைன் புக்கிங் மட்டுமே உண்டு. அப்படியிருக்க சில நேரங்களில் ஓட்டுநர் பாலகருப்பையாவும், கிளீனரும் வழியில் ஆட்களை ஏற்றிக் கொண்டு பணம் வசூல் செய்து அவர்களே எடுத்துக் கொள்வார்களாம். அதே போல் பிலிம் பாக்ஸ்களை வாரம் மூன்று முறை ஏற்றி அதை உரிமையாளரிடம் கணக்கு சொல்லமாட்டார்களாம்.

   இது போன்ற விவரங்கள் உரிமையாளர் பார்வைக்கு தெரிய வந்ததும், ஓட்டுநர் பாலகருப்பையாவையும், கிளீநரையும் மாட்டுத்தாவணி அலுவலகத்துக்கு வரவழைத்து இரண்டு கைகளையும் பின்புறம் கட்டி கடுமையாக சித்ரவதை செய்தனர்.

  தாக்கும் போது அவர்கள் அம்மா வலிக்குதே என்று கத்தியும் கல் நெஞ்ச உரிமையாளர் சித்ரவதையை தொடர உத்தரவிட்டுக் கொண்டே இருந்தார்.

  இது குறித்து வெளியான தகவலின் பேரில் ஆம்னி பேருந்து உரிமையாளர் ராஜசேகர், மற்றும் தாக்குதலில் கயிறு கட்டி சித்ரவதை செய்த முத்து என்பவனையும், மேலும் சிலரையும் போலிசார் தேடி வருகிறார்களாம். 

 எப்படியும் முன்ஜாமின் வழங்க வழி கொடுத்துவிடுவார்கள்.