ஆந்திராவுக்கு அள்ளி தறீங்க? தமிழகத்துக்கு கிள்ளிக்கூட தரவில்லை! செவிட்டு அரசு என விமர்சனம்!

ஜி.கே.சேகரன்,
மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கவில்லை என பாஜக அரசை கண்டித்து திமுக'வினர் தமிழகமெங்கும் ஆர்பாட்டம் நடத்தினர்.
வேலூர் மாவட்டம்,
வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் தலைமையில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன் உள்ளிட்ட 1000 திற்கும் மேற்பட்ட திமுக வினர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்
அப்போது மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கவில்லை என்றும், தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சியை நடத்துவதால் வேண்டுமென்றே தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிப்பதாக கூறியும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கவில்லை.
மத்திய அரசுக்கு வரிமட்டும் வாங்க தெரியுது, நிதி கொடுக்க தெரியாதா?
மக்கள் ஆட்சி நடக்கும் இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு பாகுபாடு பார்காமல் பகிர்ந்தளிக்க தெரியாதா?
ஆந்திராவுக்கு அளிக்கொடுக்க தெரியுது தமிழ்நாட்டிற்கு கிள்ளி கூட தரவில்லை!
தமிழ்நாடு திருநெல்வேலியிலே பெயர்போன அல்வாவை டெல்லியில் கிண்டி எங்களுக்கு அல்வாவை கொடுக்க வேண்டாம். அல்வாவை பற்றி எங்களுக்கு தெரியும் என கொஷம் போட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம்,
தமிழகத்திற்கு துரோகம் விளைவிக்க மத்திய நிதி அமைச்சருக்கும், பிரதமருக்கும் வேலையாக உள்ளது,இந்த நிதி நிலை அறிக்கை வாக்கு வங்கி அரசியல், 7 முறை தமிழகம் வந்த பிரதமர் 7 சதவிகத வாக்கு கூட வாங்கவில்லை,
திருப்பத்தூரில் நிதிநிலை அறிக்கையை கண்டித்து, திமுக சார்பில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை பேச்சு..
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு நிதி ஒதுக்காததை கண்டித்து, பாஜக அரசுக்கு எதிராக திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை மத்திய பாஜக அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை புறக்கணித்து வருகிறது.
இது ஒரு போலியான பட்ஜெட்.
தமிழ்நாடு ஒன்றிய அரசுக்கு 8.75 சதவிகிதம் வரி அளித்து இந்தியாவிலேயே இரண்டாவது மாநிலமாக உள்ளது.
ஆனால் 8 லட்சம் கோடி வரி அளித்தும், ஒன்றிய அரசு 1 லட்சம் கோடி தான் திருப்பி தருகிறார்கள், வேலை வாய்ப்பிலும் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிதிநிலை அறிக்கை என்பது வாக்கு வங்கி அரசியல், 7 முறை தமிழகத்திற்கு வந்த பிரதமர் 7 சதவிகத வாக்குகூட வாங்க வில்லை.
தமிழ்நாட்டில் பிறந்து, தமிழகத்தை புறக்கணிக்கின்றார் ஒன்றிய நிதி அமைச்சர்.
தமிழகத்திற்கு துரோகம் விளைவிக்க ஒன்றிய நிதி அமைச்சருக்கும், பிரதமருக்கும், வேலையாக உள்ளது.
பாஜக ஆளுகின்ற மாநிலங்களிலேயே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு உள்ளது.
இந்த செவிட்டு, அரசிற்கும், குருட்டு அரசிற்கும், இந்த போராட்டம் தெரிய வேண்டும் என கடுமையாக விமர்சித்தார் மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இராணிப்பேட்டை மாவட்டம்,
இராணிப்பேட்டை மாவட்டத்தில், முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே நடத்தப்பட்ட திமுக ஆர்பாட்டத்தில்,
அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தலைமை வகித்து இருந்தார். இதில் தமிழக விரோத போக்காக செயல்படும் மத்திய அரசைக்கண்டித்து திரளான திமுகவினர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினார்கள்