வழக்கே வேண்டாம் சமரசமே போதும்:-வலியுறுத்தி ஊர்வலம்!

வழக்கே வேண்டாம் சமரசமே போதும்:-வலியுறுத்தி ஊர்வலம்!

  கு.அசோக்,

  ஒருங்கிணைந்த வேலூர் நீதிமன்ற வளாகம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையில் சமரசம் மூலம் பிரச்சணைகளுக்கு தீர்வு காண வேண்டுமென வழக்கறிஞர்கள் சமரச மையம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.

  வேலூர் மாவட்டம், ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் சார்பாக சமரச மையம் நடத்தும் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

 ஊர்வலமானது ஒருங்கிணைந்த வேலூர் நீதிமன்றம் வளாகத்தில் இருந்து தொடங்கி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை விழிப்புணர்வு  சென்றது.

  இதனை மாவட்ட முதன்மை நீதிபதி துவங்கி வைத்தார்.

 அப்போது கையில் பல்வேறு சமரசம் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை அடங்கிய பதாகைகளுடன் முழக்கங்களை எழுப்பியவாறு நீதிமன்ற வளாகத்திலிருந்து ஆட்சியர் அலுவலகம் வரையில் சென்று பொதுமக்களுக்கு சமரச மையம் மூலம் சுமுகமாக தீர்வு காண்பது என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.