திருப்பத்தூரில் ஆட்சித்தலைவர் - ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் ஆய்வு! பொது மக்களுக்கு முறையான சிகிச்சைகள் வழங்க அறிவுறை!

திருப்பத்தூரில் ஆட்சித்தலைவர் -  ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் ஆய்வு! பொது மக்களுக்கு முறையான சிகிச்சைகள் வழங்க அறிவுறை!

 ஆர்.ரமேஷ்,

 திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்யித்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் கோடியூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தி பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை ஆணையருமான முனைவர்.இரா.நந்தகோபால்,இ.ஆ.ப., அவர்களும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்,இ.ஆ.ப., அவர்களும் நேரடி கள ஆய்வு மேற்கொண்டனர்.

  திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி கோடியூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தி பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை நேரடி கள ஆய்வு மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு அளிக்கப்படும் பரிசோதனை குறித்து கேட்டறிந்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை  வழங்கி, பொது மக்களுக்கு முறையான சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டுமென சம்மந்தப்பட்ட மருத்துவ அலுவலருக்கு அறிவுரைகளை வழங்கினார்கள்.

 மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றுவரும் கழிவறை கட்டட பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியில் நடைபெற்றுவரும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்ட பூங்கா அமைக்கும் பணியை  ஆய்வு செய்து, இப்பணியை குறித்த காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டுமென மாவட்ட நகராட்சி ஆணையருக்கு அறிவுருத்தினர்.

  மேலும் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொன்னேரி ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் வீடு கட்டுமான பணி (ஆரடவவீ றிரசிழளந டீரடைனவீபெ), அனைத்துவித பயன்பாட்டிற்கான கட்டடம் கட்டுமான பணி, கலந்திரா ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மைய கட்டடப்பணிகளை பார்வையிட்டனர்.

   செட்டியப்பனூர் பகுதியில் உள்ள துவக்கப்பள்ளியில் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கான வண்ணமயமான ஓவியங்கள் மற்றும் வாசகங்கள் எழுதப்பட்டுவரும் பணி, அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்குவதற்காக சமைத்துவைக்கப்பட்டுள்ள மதிய உணவினை சுவைத்து, அரசு வழிகாட்டுதலின்படி சமைகப்பட்டுள்ளது எனவும் மேலும் இதேபோல் நாள்தோறும் சமைப்பதை உறிதிப்படுத்தப்பட வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுகளை வழங்கினார்கள்.

   பின்னர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஐஇஎஸ்சி காது கேளாதோர் சிறப்பு மேல்நிலைப்பள்ளியில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்" மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 38 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.24.04 இலட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனங்கள், வீல் சேர்கள், காதொலி கருவிகள், கடன் பரிந்துரை கடிதங்கள் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டைகளை வழங்கினார்கள்.

  இந்த ஆய்வுகளின்போது மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் டாக்டர்.உமாமகேஸ்வரி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.சித்ரசேனா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (மு.கூ.பொ) திரு.முருகேசன், வருவாய் கோட்டாட்சியர்கள் திரு.இராஜசேகரன், திருமதி.அஜிதாபேகம், மாதனூர் ஒன்றியக்குழு தலைவர் திரு.சுரேஷ்குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.