ஸ்மார்ட் வகுப்பறையை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார்!

ஸ்மார்ட் வகுப்பறையை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார்!

த.நெல்சன்,

வேலூர் ஆட்சித்தலைவர் அவர்கள் ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்தார்.

 எல் அண்ட் டி ஸ்மார்ட் வேர்ல்டு கம்யூனிகேசன் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதியிலிருந்து புனரமைக்கப்பட்ட கீ.வ.குப்பம் அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப் பள்ளி மற்றும் ஸ்மார்ட் வகுப்பறையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்.

 இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.ந.இராமச்சந்திரன், குடியாத்தம் தனி வட்டாட்சியர் திரு.சரவணன், கீ.வ.குப்பம் வட்டார கல்வி அலுவலர் திரு.இராபர்ட் இளவரசன், கீ.வ.குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.புஷ்பலதா சரவணன், ஒன்றிய கவுன்சிலர் திருமதி.விஜயலட்சுமி முருகன், உட்பட பலர் உடனிருந்தனர்.