நாடக கலைஞர்கள் தகவல் தொடர்பாளர்களாக உள்ளனர்! வேலூர் ஆட்சியர் பேச்சு!

ஜி.கே.சேகரன்,
நாடக கலைஞர்கள் பல்வேறு சமூக பிரச்சணைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தகவல் தொடர்பாளர்களாக உள்ளனர் மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர் - இயல் இசை நாடக மன்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பேச்சு.
வேலூர்மாவட்டம், வேலூரில் உள்ள நகர அரங்கில் இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கலைசங்கமம் திருவிழா நடந்தது. இதில் கலைஞர்கள் கொக்கிலியாட்டம், கரகாட்டம், புலியாட்டம், சிலம்பம் மற்றும் தீ கம்பு சுற்றினர். மேலும் மாறு வேடமணிந்து ஆட்டமாடினார்கள்.
இவ்விழாவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி கலந்துகொண்டு கலைஞர்களை பாராட்டினார்கள், இதில் இயல் இசை நாடக ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில் சமுதாயத்தை நல்வழிப்படுத்த நாடகங்களும் கலைஞர்களும் பங்காற்றுகின்றனர். சமுதாய பிரச்சணைகள் குறித்து மக்களிடம் கொண்டு செல்லும் தகவல் தொடர்பாளர்களாக உள்ளனர். மக்களிடம் நீங்கள் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென பேசினார்.