அரசியல் சாசனத்தை கிழித்தெறிவதா? காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!

அரசியல் சாசனத்தை கிழித்தெறிவதா? காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!

ஆர்.ரமேஷ்,

பாபாசாகேப் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தை கிழித்தெறிவதா? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவரது எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.  அதில், ஐபிஎஸ் அதிகாரி ஜஸ்பிரீத் சிங் பாஜக தொண்டர்களிடம் பேசுகிறார். நான் தலைப்பாகை அணிந்திருப்பதால், நீங்கள் என்னை காலிஸ்தானி என்று அழைக்கிறீர்கள். இந்த நாட்டில் மதத்தின் பெயரால் சமூகத்தில் விஷத்தை பரப்புவதை நீங்கள் மட்டும் தான் செய்கிறீர்கள்.

   சட்டத்தின் பாதுகாவலர்களை மதத்தின் பெயரால் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தும் அளவுக்கு நமது பன்முக கலாச்சாரத்தை விஷமாக்குகிறது. அனைவரும் ஒன்றிணைந்து" என்று பாபாசாகேப் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தை கிழித்தெறிவதா?  மதங்கள், பிரிவுகள் மற்றும் சமூகங்களுக்கு இடையே ஒற்றுமை, வெறுப்பு மற்றும் வன்முறையைப் பரப்புவதே உங்கள் ஒரே நோக்கம். பிரித்தாளும் அரசியலின் "அமிர்த காலம்" உங்கள் ஆட்சி என பதிவிட்டிருக்கிறார்.