கோட்டை பெரியார் பூங்கா குத்தகையை ரத்து செய்த நீதிமன்றம்!

கோட்டை பெரியார் பூங்கா குத்தகையை ரத்து செய்த நீதிமன்றம்!

  ஜே.தேவபிரகாஷ்,

     வேலூர் கோட்டை அருகே உள்ள பெரியார் பூங்காவினை மாறன் என்கிறவர் தரப்பு குத்தகைக்கு எடுத்திருந்தது. இந்நிலையில் ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையில் மேற்படி ஒப்பந்ததாரர், குத்தகையினை மேலும் நீட்டிக்க கோரிய மனு அளித்திருந்தார்.

  அந்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்த நிலையில், அதனை எதிர்த்து குத்தகைதாரர் மேல்முறையீடு தாக்கல் செய்திருந்தார்.

  அதன் பேரில், கால அவகாச நீட்டிப்புக்கு மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் இரா.நீலகண்டன் அவர்கள் ஆஜரானார்.

  அவர் சட்ட பூர்வமான ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து, ஏற்கனவே உள்ள தனி நீதிபதி உத்தரவினை செயல்படுத்தி, குத்தகைதாரரை வெளியேற்ற அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கலாம் என்று மாண்புமிகு நீதிபதி பரேஷ் உபாத்யாய் மற்றும் மாண்புமிகு நீதிபதி சத்திகுமார் சுகுமார குருப் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

  இதனால் தனியார் பிடியிலிருந்த பெரியார் பூங்காவுக்கு விமோச்சனம் கிடைத்திருக்கிறது.