எஸ்கேப் ஆன காதலனை மடக்கி கல்யாணம் செய்து கொண்ட பெண்!

எஸ்கேப் ஆன காதலனை மடக்கி கல்யாணம் செய்து கொண்ட பெண்!

  ஜி.கே.சேகரன்,

 காதலித்து ஏமாற்ற நினைத்த வாலிபரை போலீசார் உதவியுடன் திருமணம் செய்து கொண்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

  திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காக்கனாம்பாளையம் பகுதியை சார்ந்த பள்ளி ஆசிரியரான ராஜேந்திரன் மகள் வெற்றிச்செல்வி (24) இவரும் அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ஜெகதீஷ் (24) ஆகிய இருவரும் சுமார் ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

  அதனைத் தொடர்ந்து இருவரும் வெவ்வேறு இனத்தைச் சார்ந்தவர் என்பதால் ஜெகதீசன் தந்தையான செல்வராஜ் அவரை கண்டித்துள்ளார்.

  அதன் காரணமாக வெற்றி செல்வியை ஜெகதீசன் சுமார் ஐந்து மாதங்களாக காதலை தவிர்த்து வந்துள்ளார்.

  வெற்றிச்செல்வியை ஜெகதீசன் காதலிக்கும் போது உன்னை தவிர வேற எந்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என ஆசை வார்த்தைகள் கூறி தனிமையிலிருந்து பின்னர் கருகளைப்பு செய்ததாக தெரிகிறது.

   அதன் பேரில் தற்போது ஜெகதீசன் தன் காதலை தவிர்த்து வருவதால் உஷாரான வெற்றிச்செல்வி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தன்னையும் தனது காதலன் ஜெகதீசனையும் சேர்த்துவைக்க புகார் மனு அளித்தார்.

   அதன்பேரில் மாவட்ட கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வெற்றிச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் ஜெகதீசன் கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர்.

  அதனை அடுத்து ஜெகதீசன் வெற்றிசெல்வியை திருமணம் செய்து கொள்வதாக கூறியதன் அடிப்படையில் காவல் நிலையத்தில் உள்ள கோயிலில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

  தன்னை காதலித்து ஏமாற்றிய காதலனை சட்டத்தின் துணையுடன் கரம் பிடித்த பெண்ணை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.