நறுவீ மருத்துவமனையில் தீக்காயம் மற்றும் பக்கவாத சிகிச்சை மையம் விரைவில் துவக்கம்! மூன்று ஆண்டுகளில் 1500 பிரசவம்  தலைவர் ஜி.வி.சம்பத் பேட்டி!

நறுவீ மருத்துவமனையில் தீக்காயம் மற்றும் பக்கவாத சிகிச்சை மையம் விரைவில் துவக்கம்! மூன்று ஆண்டுகளில் 1500 பிரசவம்  தலைவர் ஜி.வி.சம்பத் பேட்டி!

ம.பா.கெஜராஜ்,

வேலூர் நறுவீ மருத்துவமனையில் புதியதாக தீக்காயம் சிகிச்சை மையம் மற்றும் பக்கவாத சிகிச்சை மையம் விரைவில் துவக்கம் -  மூன்று ஆண்டுகளில் 1500 பிரசவம் - தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் பேட்டி

 வேலூர் நறுவீ மருத்துவமனையில் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்,  பக்கவாத

நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சை அளிக்க புதியதாக இரண்டு சிறப்பு சிகிச்சை

மையங்கள் தொடங்கப்பட உள்ளதாக அம்மருத்துமவனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத்

தெரிவித்துள்ளார்.

 இது சம்மந்தமாக மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேலும் அவர் கூறியதாவது:-

  வேலூரில் இயங்கி வரும் நறுவீ மருத்துவமனையில் பல்வேறு நோய்களால்

பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையில்

குணமடைந்த நோயாளிகளை தொடர்ந்து கண்காணிக்கும் பணியும் இம்மருத்துவமனையின் மூலம்

நடைப்பெற்று வருகிறது.

 இம்மருத்துவமனை தொடங்கப்பட்டு மூன்றாண்டு ஆகிறது. இந்த கால

கட்டத்தில் வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இம் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு

இருதய சிகிச்சை, நுரையீரல், மகப்பேறு மருத்துவம், சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு,குடல் நோய் சிகிச்சை,மூட்டு வலி மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நரம்பியல் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு விதமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

 இதுவரையிலும் இருதய நோயால் பாதிக்கப்பட்ட 2500-க்கும் மேற்ப்பட்ட நோயாளிகளுக்கு ஆன்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இரைப்பை குடல் நோயால் பாதிக்கப்பட்ட 8500-க்கும் மேற்ப்பட்ட நோயாளிகளுக்கு எண்டோஸ்கோபி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட 7000-க்கும்

மேற்ப்பட்டவர்களுக்கு பொது அறுவை சிகிச்சையும், சிறுநீரகம் பாதிக்கப்பட்ட 7000-க்கும் மேற்ப்பட்டவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

 மேலும், இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1500 பெண்கள் ஆரோக்கியமான முறையில் குழந்தை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  இம்மருத்துவமனையில் புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் பணி முழு நேரமாக நடத்தப்பட்டு வருகிறது. இரத்தப்புற்று நோய் மற்றும் எலும்பு மஜ்ஜை சிகிச்சைஇந்தியாவில் புகழ்பெற்ற பத்மஸ்ரீ டாக்டர் மாமன் சாண்டி தலைமையில் அளிக்கப்பட்டு வருவது சிறப்புக்குறியது.

 எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையை இந்தியாவில் முதன் முதலில் செய்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு சிறப்பு சிகிச்சை பிரிவுகளுடன் இயங்கி வரும் இம்மருத்துவமனையில் புதியதாக தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவும், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே இந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் புதியதாக இதற்கான சிறப்பு மையங்கள் தொடங்கப்பட உள்ளது.

  மேலும், அரசு மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க தமிழ்நாடு அரசின் அனுமதிபெறப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 பேட்டியின் போது மருத்துவமனை துணை தலைவர் அனிதா சம்பத், செயல் இயக்குனர் டாக்டர்

பால் ஹென்றிரூபவ் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ்ரூபவ் மருத்துவ கல்வி

இயக்குனர் டாக்டர் திலிப் மத்தாய்,  பொது மருத்துவத்துறை தலைவர் டாக்டர் குரியன் தாமஸ், தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன், பொது மேலாளர் நிதின் சம்பத் ஆகியோர் பங்கேற்றனர்.