அனுமதியின்றி ஊர்வலம் சென்றதால் மா.கம்யூ-க்கள் மீது வழக்கு! போலிசாருக்கு எதிராக அடாவடி!

ஜி.கே.சேகரன்,
நவம்பர் 7 புரட்சி தினம் பேரணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு - அனுமதியின்றி ஊர்வலம் சென்ற அனைவரும் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நவம்பர் 7 புரட்சி தினத்தை செஞ்சாட்டை பேரணி தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடத்தினர்.
சோசலிசம் என்பது கனவு அல்ல அது இறுதி லட்சியம். ஒப்பில்லா சமூகத்தை உலக பார்வைக்கு உருவாக்கி உலகத்தின் ஒரு பாதியை தன் பாதையில் நடக்க வைத்த 1917 நவம்பர் 7 புரட்சி தினம் என்பதை எடுத்துக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடியாத்தம் நகர செயலாளர் காத்தவராயன் தலைமையில் தெருமுனைப் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் மார்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் துறை அனுமதியின்றி ஊர்வலமாக சென்றனர். அனுமதி இன்றி ஊர்வலமாக சென்றவர்களை போலிசார் தடுத்து நிறுத்திய போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் வாக்குவாதமும் தள்ளு முள்ளும் ஏற்பட்டது.பின்னர் ஊர்வலத்தின் போது காவல்துறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அனுமதி இன்றி ஊர்வலமாக சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது குடியாத்தம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவம்பர் 7 புரட்சி தினமான இன்று தெருமுனை கூட்டத்தின் போது திடீரென ஊர்வலமாக சென்று காவல்துறையினருக்கும் கட்சி நிற்கும் தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.