டிரான்ஸ்பர் ஆகும் போலிசாரை ரிலீவ் செய்ய தாமதித்தால் நடவடிக்கை பாயும்!!டி.ஜி.பி. அதிரடி உத்தரவு!

டிரான்ஸ்பர் ஆகும் போலிசாரை ரிலீவ் செய்ய தாமதித்தால் நடவடிக்கை பாயும்!!டி.ஜி.பி. அதிரடி உத்தரவு!

.பா.கெஜராஜ்,

காவல் துறையில் ஒரு இடம் விட்டு மறு இடத்துக்கு டிரான்ஸ்பர் செய்யப்படும் போலிசாரை சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக ரிலீவ் செய்ய வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி.முனைவர்.சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுளளார்.

 டிரான்ஸ்பர் செய்யப்பட்டு ஒரு வாரத்துக்குள் ரிலீவ் செய்யாமல் போனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்.

 இந்த உதரவின் பின்னணி என்ன என்பதை பார்ப்போம்.

 திருநெல்வேலி மாவட்டத்தில் காவலர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார்.

 அவரது பெயர் அலெக்ஸ்,கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவர் நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார்.

  அப்படியிருக்க அலெக்ஸ் சில வாரங்களுக்கு முன்பு கடலூருக்கு மாற்றப்பட்ட நிலையில் அவரை மேலதிகாரி ரிலீவ் செய்யவில்லை.

  தன் மனைவி பிரசவ நேரத்தில் உள்ளார் என்றெல்லாம் உயரதிகாரியிடம் உருக்கமாக எடுத்துரைத்தும் பலனில்லாமல் போனது.

 இந்நிலையில் அவரது மனைவிகுய் குழந்தை பிறந்து அது அடுத்த நாளே இறந்து விட்டது.

  இதையறிந்த காவலர் அலெக்ஸ் குழந்தைக்கு கடைசி சடங்குகளையும் செய்ய விரும்பினார். ஆனால் இதற்கு உயர்அதிகாரி அனுமதி மறுத்தார். இதனால் காவலர் அலெக்ஸ் தற்கொலைக்கு முயன்றார். முன்னதாக அவர் மனதில் உள்ளதை ஆடியோ பதிவு செய்த  பரவவிட்டார்.

  அலெக்ஸின் ஆடியோ டி.ஜி.பி.யின் பார்வைக்கு சென்றது.

 அதையடுத்தே காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டால் உடனே அவர்களை உயர் அதிகாரிகள் ரிலீவ் செய்ய வேண்டும் என்றும்,  அப்படி செய்யாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

 மேற்கண்ட அறிவுறுத்தல்களில் ஏதேனும் கவனக்குறைவு இருந்தாலும், உத்தரவிற்கு இணங்காதது தெரியவந்தாலும் அது அதிருப்தி தரும் செயலாக பார்க்கப்படும். அத்துடன் சட்டபூர்வமான அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்தில் அலட்சியம் காட்டினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

ஓபன் மைக்கில் அவமானம்..
கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர் தீபா. இவர் வெளிப்பணிகளுக்காக கடந்த 7 மாதங்களாக வரஞ்சரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மீண்டும்  பணிக்கு வரும்படி கடந்த சில நாட்களாக அழைத்து வந்துள்ளனர். மேலும், வரஞ்சரம் காவல் நிலைய அதிகாரிகள், நீதிமன்ற பணியில் ஈடுபடும்படி வற்புறுத்தி வந்துள்ளனர்.இரு காவல் நிலையங்களிலும் பணிக்கு வரும்படி அழைத்ததால்., காவலர் தீபா மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தீபா பணிக்கு வரவில்லை என ஒலிவாங்கி மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான காவலர் தீபா, வரஞ்சரம் காவல் நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.