தோல்வியை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் மாணவர்களுக்கு வர வேண்டும்! நறுவீ ஜி.வி.சம்பத் பேச்சு!

ஜி.கே.சேகரன்,
தோல்வியையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று வேலூர் நறுவீ மருத்துவமனையின் தலைவர் ஜி.வி.சம்பத் பேசினார்.
50 லட்சம் மதிப்பில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியை புணரமைப்பு செய்த முன்னாள் பள்ளி மாணவர்களை ஆசிரிய பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுபட்டு பகுதியில் 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு நிதி உதவி பெறும் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேல்நிலைப் பள்ளியில் சுமார் 750 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் வெளிநாடுகளிலும் அரசு பணிகளிலும் உள்ளார்கள்.
பல்வேறு மாணவர்களை உருவாக்கிய இந்த பள்ளி கட்டிடம் மற்றும் வகுப்பறைகள் குடிநீர் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட சரிவர இல்லாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 1982 -83 ஆம் ஆண்டு அதன்பின் படித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து பள்ளி வகுப்பறைகள் மற்றும் கழிப்பறை குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளிட்ட 50 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.
அப்போது பள்ளியை புதிய கட்டிடம் போல் அழகு படுத்தினர்.
பின்னர் தற்போது சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு புனரமைக்கப்பட்ட பள்ளியை முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து புனரமைப்பு விழா மேற்கொண்டனர். இதில் வேலூர் நருவி மருத்துவமனையின் தலைவர் ஜி.வி சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புனரமைப்பு செய்யப்பட்ட பள்ளியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பையும் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர் இது போன்ற கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தான் சிறப்பாக பயின்று உயர் பதவிகளுக்கு சென்றுள்ளனர்.
ஆகையால் தற்போது படிக்கும் மாணவர்களும் வெற்றியை மட்டும் கொண்டாடுவதை தவிர்த்து போட்டி பொறாமை இன்றி தோல்வியையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர் முன்னாள் மாணவரும் தொழிலதிபருமான சரவணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் முன்னாள் மாணவர்கள் நாங்கள் ஒன்றிணைந்து மாணவர் சங்கத்தினை உருவாக்கி அதன் மூலம் சுமார் 50 லட்சம் மதிப்பில் பள்ளியை புனரமைப்பு செய்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த அவர் வருங்காலங்களிலும் தற்போது படிக்கும் மாணவர்கள் தான் படிக்கும் பள்ளிக்கு இது போன்ற பல்வேறு உதவிகளை செய்து உதவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.