6 ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்!

6 ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்!

  ஜி.சாந்தகுமார்,

  தமிழக அரசு நிர்வாகக் காரணங்களுக்காக அவ்வப்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது 6 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 அதில், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை நிர்வாக இயக்குனராக இருந்த பிரதாப்  சிறப்பு திட்ட செயலாக்கத் துறை துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் உதயநிதி வசமுள்ள இந்தத் துறையான பொறுப்பை மேகநாத ரெட்டி கூடுதலாக கவனித்து வந்தார்.

   ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சிறப்புச் செயலாளராக இருந்த ஜெயகாந்தன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுவிலக்கு ஆணையராக இருந்த ரத்னா ஐஏஎஸ் ஊரக வளர்ச்சித் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வணிக வரித் துறை இணை ஆணையராக இருந்த காயத்ரி கிருஷ்ணன் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும முதன்மை நிர்வாக அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

   தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை நிர்வாக இயக்குனராக விஜய கார்த்திகேயன்  நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே வகித்து வரும் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளர் பொறுப்பை கூடுதலாக முழு நேர பொறுப்பாக வகிப்பார். வேளாண் துறை கூடுதல் இயக்குனராக இருந்த ஷ்ரேயா சிங் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.