ரவுடிகளுக்கு காவல்துறை மீதான பயம் முற்றிலும் இல்லை! எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு அறிக்கை!

ரவுடிகளுக்கு காவல்துறை மீதான பயம் முற்றிலும் இல்லை! எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு அறிக்கை!

ஜி.சாந்தகுமார்,

 ரவுடிகளுக்கும், குண்டர்களுக்கும் காவல்துறை மீதான பயம் முற்றிலும் இல்லாமல் போனது, என்று தமிழ்நாடு எதிர்கட்சி தலைவர் பரபரப்பாதெரிவித்துள்ளார்.

   நெல்லை மாவட்டம் கல்லிடைக் குறிச்சி  பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த பேருந்தை மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் நிறுத்தக் கூறியுள்ளனர். ஓட்டுனர் ரெஜின் சற்று தூரம் தள்ளி நிறுத்தியுள்ளார். மேலும் அவர்களை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள், ரெஜின் மற்றும் நடத்துனர் கண்ணனை அரிவாளால் தாக்கினர். இதுதொடர்பான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

  இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த செயலைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

  அரசு பேருந்தின் ஓட்டுநர் ரெஜின் மற்றும் நடத்துநர் பாண்டி ஆகியோரை அந்தக் கும்பல் அரிவாளால் வெட்டியதில், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வருகின்றன. அரசு பேருந்து ஊழியர்கள் மீது நடத்தப்பட்டுள்ள இந்த கொடும் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பற்ற இந்த ஆட்சியில், பணியாற்றுவது எப்படி என்ற கேள்வி அனைத்து அரசு ஊழியர்கள் மத்தியிலும் பரவலாக பேசப்படுவதாகக் குறிப்பிட்டிருக்கும் அவர், "திமுக அரசு பொறுப்பேற்றது முதல் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, அராஜகம், அடாவடி, கஞ்சா கலாச்சாரம் என சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதை தினமும் நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள், நமக்கு மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டுகிறது"

 பொதுமக்களும், குறிப்பாக பெண்கள் பகலிலேயே நடமாட அஞ்சுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது, ரவுடிகளுக்கும், குண்டர்களுக்கும் காவல்துறை மீதான பயம் முற்றிலும் இல்லாமல் போனதன் விளைவே இத்தகைய செயல்கள் தொடர்வதற்கான காரணம்.

  அதிமுக ஆட்சிக் காலத்தில் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக தமிழக காவல்துறை பேசப்பட்டதாகவும் இன்று, திமுக ஆட்சியாளர்களின் கைப்பாவையாக, ஆளும் கட்சியினருக்கு வேண்டாதவர்கள் மீதும், எதிர்க்கட்சியினர் மீதும், குறிப்பாக ஐடி விங்க் நிர்வாகிகள் மீதும் பொய் வழக்குகள் பதிவு செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

  இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்க, தமிழகக் காவல்துறை பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்போரை இரும்புக் கரம் கொண்டு அடக்கிட வேண்டும் என்றும், இதற்கு பொறுப்பு வகிக்கும் திமுக அரசின் முதல்வர், காவல் துறையினை சட்டப்படி சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் அந்த¢ கேட்டுக் கொண்டிருக்கிறார்.