ஈரோடு இடைத்தேர்தல்:- ஓ.பி.எஸ்.வேட்பாளர் வாபஸ்!
ஜி.சாந்தகுமார்,
ஓ.பி.எஸ்.வேட்பாளர் செந்தில் முருகன் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சிவபிரசாந்த், இவருக்கு மாற்று வேட்பாளராக விசாலாட்சி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதேபோன்று ஓ.பன்னீர்செல்லம் அணி சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடம் செந்தில்முருகன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஆனால் வேட்பாளர் செந்தில்முருகன் தற்போது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார். இந்த நிலையில் அவரை அதிமுக அமைப்பு செயலாளராக நியமித்து உள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.