ராஜிவ் கொலை வழக்கு:- முருகன் - சாந்தன் விடுதலையாகியும் சிறப்பு முகாமில் வைப்பு! தடுக்கும் பாஸ்போர்ட் விஷயம் !

ராஜிவ் கொலை வழக்கு:- முருகன் - சாந்தன் விடுதலையாகியும் சிறப்பு முகாமில் வைப்பு! தடுக்கும் பாஸ்போர்ட் விஷயம் !

 ஜி.கே.சேகரன், 

  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்மந்தபட நாளினி சிறையில் இருந்து இன்று விடுதலை - சாந்தன் முருகன் ஆகியோர் திருச்சியில் உள்ள சிறப்பு அழைத்து செல்லப்பட்டனர் 

   வேலூர் மாவட்டம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி, தனது தாயாரின் உடல் நிலையை கவனித்துக் கொள்ள பரோல் கேட்டு தமிழக அரசிடம் விண்ணப்பித்திருந்தார்.இந்த நிலையிலகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிபந்தனையின் பேரில் பரோல் வழங்கப்பட்டது.பரோலில் வெளிவந்த நளினிவேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள நண்பர் வீட்டில்தங்கி இருந்து வந்தார்.

  அதனைத் தொடர்ந்து கடந்த 10 மாதமாக அவர் பரோலில் தனது தாயார் பத்மா உடல் நிலையை கவனித்து வந்த சூழ்நிலையில்,நேற்று அவரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

  இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் தீர்பின் நகல் சிறைச்சாலைக்கு கிடைக்கப்பெற்ற நிலையில், பரோலில் உள்ள நளினியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய பெண்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.பின்பு சிறையில் விடுதலைக்கான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார்.

  இதனைத் தொடர்ந்து வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உள்ள சாந்தன் முருகன் ஆகியோரும் விடுதலை ஆகினர் பின்னர் அவர்கள் திருச்சி உள்ள சிறப்பு முகாமிற்கு காவல் துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

 குறிப்பு:- முருகன், சாந்தன் ஆகியோர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை அப்படியே வெளியில் விட இயலாத அளவுக்கு சட்ட வழிகாடுதல்கள் உள்ளன.

   ஆகவே அரசு அதற்கான வழிமுறைகளை வெளியிடும், முருகன் மனைவியுடன் தமிழ்நாட்டிலேயே தங்க வழி உண்டா? சாந்தனுக்கு பஸ்போர்ட் போன்ற இத்யாதிகள் உள்ளன. விரைவில் இதற்கான வரையரைகள் அதிகார பூர்வமாக தெரியும்