தி.நகரின் அடையாளமாகப் போகும் பனகல் மெட்ரோ நிலையம்!

ஜி.சாந்தகுமார்,
சென்னை தி நகரின் அடையாளங்கள் பற்பல இருக்கும் நிலையில், அதையெல்லாம் தூங்ங்கிச்சாபிட மெட்ரோ ரயில் நிலையம் என்கிற டையாளம் நிலைநிற்க பொகிறது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கொண்டு வரப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் அடுத்தடுத்து புதிய பரிமானங்களை எட்டி வருகிறது. தற்போது ப்ளூ லைன், க்ரீன் லைன் ஆகியவை பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், பர்பிள் லைன், ஆரஞ்சு லைன், ரெட் லைன் ஆகியவற்றை கட்டமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதில் கலங்கரை விளக்கம் மெட்ரோ முதல் பூவிருந்தவல்லி புறவழிச்சாலை வரையிலான ஆரஞ்சு லைன் மெட்ரோ மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது எனலாம்.
ஆரஞ்சு லைன் மெட்ரோ சென்னையின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடம் ஆகும். இதில் நந்தனம் மற்றும் கோடம்பாக்கம் இடையில் பனகல் பூங்கா மெட்ரோ ரயில் நிலையம் வரவுள்ளது.
இந்த பகுதியில் சுரங்கப் பாதையில் ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பூமிக்கு அடியில் துளையிட்டு வழித்தடம் அமைப்பதற்கான முதல்கட்டப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த திட்டம் நிறைவடையுமாம்.
ஆவே மெட்ரோ ரயில் மூலம் தி.நகர் வர வேண்டுமெனில் பனகல் பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினால் எல்லாமுமே பக்கம் தான்.
எனவே பனகல் ரயில் நிலையம் தி.நகரின் புதிய அடையாளமாக மாறப் போகிறது.