நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் தாக்கு:-கண்டித்து ஆர்பாட்டம்!

கு.அசோக்,
தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திர ராஜா மீது கொலை வெறிதாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய கோரி - வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் நியாயவிலைக்கடை பணியாளர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.
வேலூர் மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்டத்தலைவர் செல்வம் ஆர்பாட்டமானது நடைபெற்றது.
இதில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திர ராஜா மீது கொலை வெறிதாக்குதலை நடத்தி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை தாக்கியவர்களை கைது செய்ய கோரி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நியாயவிலை கடை பணியாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தினார்கள் இதில் திரளான நியாயவிலைக்கடை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.