வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்து மூலம் அளிப்பவர்களுக்கேஆதரவு! விக்கிரம ராஜா பேட்டி!

வணிகர்களின் கோரிக்கைகளை  நிறைவேற்றுவதாக எழுத்து மூலம் அளிப்பவர்களுக்கேஆதரவு! விக்கிரம ராஜா பேட்டி!

கு.அசோக்
வணிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக எழுத்து மூலம் வாக்குறுதி கொடுப்பவர்களுக்கு எங்களது ஆதரவு,ரூ.2 லட்சம் வரையில் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை -   வாக்குக்காக பணம் வாங்க கூடாது, அதிகாரிகளும் வாக்குக்கு பணம் அளிப்பதை தடுக்க தீவிரமாக செயல்படவேண்டும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி. 

வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஜே.பி.எம் திருமண மண்டபத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு  ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது.

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமையில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பாலமுருகனடிமை சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர் இதில் பாலமுருகனடிமை சுவாமிக்கு திருவள்ளூவர் விருதும்,லட்சுமணன் மற்றும் சௌகத் அலி ஆகியோர்களுக்கு வணிக செம்மல் விருதுகள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் மறைந்த வணிகர் சங்க பேரமைப்பு மண்டலத்தலைவர் கிருஷ்ணன் திரு உருவ படத்திற்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் வணிகர் சங்கபேரமைப்பு மாவட்ட செயலாளர் ஞானவேல்,பொருளாளர்அருண்பிரசாத்,மற்றும் சுபாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். 

பின்னர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில் மதுரையில் வணிகர் விடுதலை மாநாட்டை நடத்தவுள்ளோம்.  

ஜி.எஸ்.டி குளறுபடிகளால் தகுதியை மீறி அபராதத்தை வணிகர்கள் கட்டுகின்றனர். இதனை ஒருமுனை வரியாக மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் நேற்று  மனு அளித்தோம்.


 வணிகவரித்துறை மூலம் தென்னகம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது வணிகர்கள் கால அவகாசம் கேட்டு வரி கட்ட ஏழு நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுத்தனர்.

 அரசு வரும் காலங்களில் பேரிடர் பிரச்சணை காலங்களில் தீர்வு காணும் வாய்ப்பை மாநில அரசுக்கு வழங்க வேண்டும்.

 லைசன்ஸ் பெறுவதில் கட்டிடம் கட்டி ரசீது கொடுத்தால் தான் லைசன்ஸ் என்பதை மாற்றியமைக்க வேண்டும்.

 அது மறு சீரமைக்க வேண்டும், தமிழகம் முழுவதும் லட்சகணக்கான வணிகர்களை திரட்டி மே ஐந்தாம் தேதி மாநில மாநாட்டை நாங்கள் நடத்துகிறோம்.

 வரும் அரசு எங்களை அழைத்து பேசி பிரச்சணைகளை தீர்க்கும் அரசாக அமைய வேண்டும்.

 தமிழக தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு அளித்துள்ளோம், 50 ஆயிரம் மட்டும் பணக் கொண்டு செல்லலாம் என்பதை மாற்றி குறைந்த பட்சம் ரூ2 லட்சம் கொடுங்கள் செல்ல வாய்ப்பு தர வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளோம்.


 வாக்காளர்களுக்கு பணம் அளிப்பதை அதிகாரிகள் தடுக்க வேண்டும், வணிகர் சங்கம் சார்பில் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு பேரணியை நடத்தவுள்ளோம்.

 வாக்கை  விற்பனை செய்ய கூடாது என்பதையும் வலியுறுத்தியுள்ளோம்.


 வரி உயர்வால் திருமண மண்டபங்கள் எல்லாம் மூடிவிட்டனர்.


 இதனை முதல்வர் பரிசீலனை செய்து வரி உயர்வை குறைக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களை நாங்கள் எதிர்க்கிறோம்,டி மார்ட் மற்றும் கேரள நிறுவனங்களும் இங்கு காலூன்றி வணிகம் செய்கின்றனர், இதனால் லட்சக்கணக்கான தமிழக வணிகர்கள் வேலையில்லாமல் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.  

கார்பரேட் ஆன் லைன் வணிகம் தடை செய்ய வேண்டுமென கூறியதை அடுத்து ஒருமாத காலம் அதனை நிறுத்தி மீண்டும் மத்திய அரசு அதனை தொடர அனுமதித்துள்ளது.
 கார்பரேட் 

நிறுவனங்கள் நுழைந்ததால் பெயர் பலகைகள் ஆங்கிலத்தில் உள்ளது, அதனை முழுவதுமாக தமிழில் மாற்ற அது முதல்வரின் கவணத்திற்கு கொண்டு செல்லபட்டுள்ளது.


 கூடுவாஞ்சேரியில் வணிகர் வெட்டப்பட்டு தாக்கப் பட்டுள்ளார். மாமூல் கொடுக்காததால் இது நடந்திருக்கிறது. 


 இதை போராட்டம் செய்து முதல்வரின் கவணத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். வணிகர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்.


 யார் எங்களின் கோரிக்கையை நிறைவேற்றுகிறோம் என எழுத்து பூர்வமாக தருகிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிப்போம்.


 பெரும்பாலான கடைகளில் வேலைக்கு ஆட்கள் இல்லை.  எல்லா பொருட்களுக்கும் வரி போடுங்கள், அது குறைப்பு வேண்டும் ஒரு முனை வரியாக இருக்க தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.

 டெல்லியில் இதுகுறித்து புதிய அரசிடம் மனு அளிக்கவுள்ளோம்.


 எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது மனு அளித்தோம் தற்போது முதல்வர் ஸ்டாலினை சந்தித்தோம். நாங்கள் எங்கள் கோரிக்கைக்காக முதல்வர்களை சந்திக்கிறோம் வணிகர் சங்க பேரமைப்பு யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவாக இருப்போம்.

 ஆண்டுக்கு ஒருமுறை லைசன்ஸ் என்பதை மாற்றி தமிழக அரசு மூன்றாண்டுக்கு ஒரு முறை என அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்,பாராட்டுகிறோம்.


 மத்திய அரசு ஒரு முனை வரியை அறிவித்தால் டெல்லி வரையில் சென்று அவர்களை பாராட்ட உள்ளோம். யார் உதவி செய்தாலும் வணிகர்கள் அவர்களை பாராட்டுவார்கள் என கூறினார் .