வெறும் 15 அதிகாரிகள் மட்டுமே பங்கேற்ற ஆறு மாவட்டங்களுக்கான ஆய்வு கூட்டம்! ஆணையர் அப்செட்!!

வெறும் 15 அதிகாரிகள் மட்டுமே பங்கேற்ற ஆறு மாவட்டங்களுக்கான ஆய்வு கூட்டம்! ஆணையர் அப்செட்!!

ஜி.கே.சேகரன்,

  பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர் மரபினர் துறை அதிகாரிகளுக்கான மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் ஆணையர் சம்பத் தலைமையில் நடந்தது - மண்டல அளவிலான கூட்டத்தில் அதிகாரிகள் பெரும்பாலானோர் வரவில்லை 15 பேர் மட்டுமே கலந்துகொண்டதால் ஆணையர் ஏமாற்றம்.

  வேலூர்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினருக்கான வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி  ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகளுக்கான மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் சம்மந்தப்பட்ட துறையின் ஆணையர் சம்பத் தலைமையில் நடைபெற்றது.

 இந்தக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

 அப்போது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை ஆணையர் சம்பத் பேசுகையில் கல்வி உதவித்தொகை திருமண உதவித்தொகைகள் மற்றும் தையல் இயந்திரம் வழங்குதல் உள்ளிட்டவைகள் பல்வேறு நலத்திட்டங்களில் அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து இக்கூட்டம் நடத்துவதாக பேசினா£.¢

  ஆனால் 6 மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகளுக்கான இக்கூட்டத்தில் வேறும் 15 அதிகாரிகல் மட்டுமே பங்கேற்றது ஆணையர் சம்பத்திற்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.