தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்!

தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்!

நரேஷ்.N.

அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் தொழுகையில் ஈடுபட்ட ஐந்து வெளிநாட்டு மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.

தற்போது ரம்ஜான் நோன்பு நாட்கள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் வெளிநாட்டு இஸ்லாமிய மாணவர்கள்  விடுதியில் தொழுகை நடத்திருக்கிறார்கள்.

அப்பொழுது  அவர்களுக்கு எதிராக சிலர் கோஷம் எழுப்பி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் உஸ்பெக்கிஸ்தான், ஆப்கன், தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அகமதாபாத் கூடுதல் காவல் ஆணையர் நீரஜ் குமார் ஐபிஎஸ் அவர்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்து தாக்குதல் நடந்திருப்பதை உறுதி செய்தார்.

பின்னர் கூடுதல் ஆணையர் தெரிவிக்கையில் முழுமையான விசாரணைக்கு பிறகு வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று சொன்னார்.

மேலும் கல்லூரி விடுதிக்குள் புகுந்து வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியாக 25 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் காயம்பட்ட மாணவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.