எம்பி ஆவதை தடுக்க ஆதீனம் - திமுகவுடன் சேர்ந்து சூழ்ச்சி செய்தனராம்! கைதான பாஜக மாவட்ட தலைவர் அகோரம் தரப்பில் உடான்ஸ்!

க.பாலகுரு,
தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ இருப்பதாக கூறி பணம் கேட்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தை மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று கைது செய்த மயிலாடுதுறை தனிப்படை போலீசார் இன்று மயிலாடுதுறை அருகே திருச்செம்பள்ளியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் :-
பின்னர் அவர் மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட அகோரம் மும்பையில் உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மயிலாடுதுறை குழந்தைகள் தடுப்பு குற்றபுலனாய்வு காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான தனிப்படை போலீசார் அவரை மடக்கிப்பிடித்தனர்.
மகாராஸ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் அலிபாக் நகரில் உள்ள நாகோன் பீச்சில் பதுங்கியிருந்த பாஜக மாவட்ட தலைவர் அகோரம் வசமாக சிக்கினார்.
தொடர்ந்து அலிபாக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் இன்று மயிலாடுதுறைக்கு பாஜக மாவட்ட தலைவர் திருச்செம்பள்ளியில் உள்ள தரங்கம்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
அப்போது நீதிபதி கனிமொழி விசாரணை மேற்கொண்டார்.தொடர்ந்து பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தை வருகின்ற 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பின்னர் அவர் மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக நீதிமன்ற வளாகத்தில் மாடியில் நின்று கொண்டிருந்த அகோரம் பந்தாவாக கையசைத்து சீன் போட்டார்.
அதேபோல அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றப்படுவதற்கு முன் "பாரத் மாதா கி ஜே" என்று விவஸ்த்தை இல்லாமல் கோஷமிட்டார்
அகோரம் பிடிப்பட்ட விஷயம் உள்ளூர் பாஜகவினருக்கு தெரிய வந்ததும் அவர்கள் நீதிமன்றத்தின் வாயிலில் திரண்டனர் இதனால் பதட்டமான சூழல் உண்டானது.
ஆகவே காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
அதேபோல்அங்கு ஏராளமான பாஜக நிர்வாகிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு சட்டம் ஒழுங்கு சீர்கெடும் சூழல் வந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகோரம் தரப்பு வழக்கறிஞர் விஜய பிரகாஷ் கூறியபோது :-
பாஜக மாவட்ட அகோரம் அவர்கள் வரும் எம்பி தேர்தலில் போட்டியிடுவது தடுக்கும் வகையில் தமிழக அரசு செயல் பட்டியிருப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் ஆதீனம் மற்றும் தமிழக அரசு ஒன்றிணைந்து பாஜக வளர்ந்து விடக்கூடாது என்ற நோக்கில் இது போன்ற செய்திருப்பதாக விமர்சித்தார்.
அது சரி....