தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தது! உரிய ஆவணங்களுடன் பணம் கொண்டு செல்லலாம்! வேலூர் ஆட்சியர் அறிவிப்பு!

ஜி.கே.சேகரன்,
வேலூர்மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததால் பொது இடங்களில் உள்ள கட்சி கொடிகள் சுவர் விளம்பரங்கள் போன்றவற்றை எல்லாம் அப்புறப்படுத்த நடவடிக்கை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேட்டி
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில்,வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலகர் களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் வே. இரா.சுப்பு லெட்சுமி தலைமையில் நடைபெற்றது.
இதில் வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் காவல்துறையினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த ஸ்டிக்கர்கள் புகைப்படங்கள் உடனடியாக அகற்றப்பட்டது.
அத்துடன் செய்தி மக்கள் தொடர்புத்துறை விளம்பர பலகையில் இருந்த அனைத்து புகைப்படங்களும் அகற்றப்பட்டது.
அத்துடன் 15 பறக்கும் படைகளுக்கான வாகனங்களும் தயார் நிலையில் உள்ளது .
பின்னர் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததை அடுத்து நடத்தை விதிகள் அமுலுக்கு வருகிறது .வேட்பு மனுதாக்கல் மார்ச்20 ஆம் தேதி துவங்கி 27 ஆம் தேதி வரையில் நடைபெறும்.
வேட்பு மனுவை திரும்ப பெற கடைசி நாள் 30 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி .
ஜுன் 4 ஆம் தேதி எண்ணிக்கை நடைபெறும்.
அரசு கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சி விஷயங்கள் விலக்கி கொள்ளப்படும்.
தனியார் கட்டிடங்களில் உள்ள அரசியல் புகைப்படங்கள் விளம்பரங்கள் விலக்கப்படும்.
மாவட்ட அளவிலான கூட்டத்தை நடத்தி தேர்தல் விதிமுறைகளை அலுவலர்களுக்கு விளக்கியுள்ளோம்.
மேலும் தேர்தல் குறித்த புகார்களையும் மக்கள் கட்டுபாட்டு அறைக்கு தெரிவிக்கலாம்.
தேர்தல் சுதந்திரமாக நியாயமாக நடக்க அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம்.
1303 வாக்குசாவடிகள் வேலூர் மாவட்டத்தில் உள்ளது .இதில் 177 வாக்குசாவடிகள் பதட்டம் நிறைந்த வாக்குசாவடிகளாகும்.
முதல் தலைமுறை வாக்காளர்கள் மொத்தம் 37400 பேர் உள்ளனர்.
மாநகராட்சி, நகராட்சி ஆணையாளர்கள், அலுவலர்களும் முக்கிய பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்களை 48 மணி நேரத்தில் விலக்கி கொள்ள நடவடிக்கை எடுப்பார்கள்.
6 இடங்களில் ஆந்திர தமிழக எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்படும்.
சித்தூர் - வேலூர் காவல்துறையினர் கூட்டம் நடத்தினார்கள்.
சோதனை சாவடிகளும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கபடும்.
50 ஆயிரத்திற்குள் பணம் கொண்டு செல்லலாம். உரிய ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும். தேர்தல் விதிகளுக்குட்பட்டு பணத்தை மக்கள் எடுத்து செல்ல வேண்டும் .
கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டவர்கள் கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் எத்தனை பேர் என்பது தெரியவில்லை என கூறினார்.