மாடல் அழகிகள் உட்பட 25 பெண்களிடம் செக்ஸ்! அனுபவித்ததை பட்டியல் போட்டு வைத்து ரசிப்பு!

ம.பா.கெஜராஜ்,
கடந்த ஐந்து ஆண்டுகளாக பல பெண்களை ஏமாற்றி உடல் ரீதியான உறவு வைத்து பணம் பறித்த காமுகன் போலிசில் பிடிபட்டிருக்கிறார்.
அதற்கு காரணம் மூன்று மாடல் அழகிகள். அவர்கள் தான் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவாலை சந்தித்து கண்ணீர் மல்க புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்கள்.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
விளம்பர படங்களில் எங்களோடு நடித்த மாடலிங் வாலிபர் ஒருவர் எங்களிடம் காதலிப்பதாக சொல்லி பழகி, பின்னர் திருமண ஆசைகாட்டி எங்களிடம் உடல் ரீதியாக உறவு வைத்து, பின்னர் லட்சக்கணக்கில் எங்களிடம் பணத்தையும் பறித்துக் கொண்டார்.
எங்களிடம் உறவு கொண்ட போது, ரகசியமாக எடுத்த படத்தை காட்டி, இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டுவார்.
இதனால் பெற்றோருக்கு தெரிந்து விடும், என்று பயந்து விஷயத்தை வெளியில் சொல்லாமல் நாங்களும் மறைத்து விட்டோம்.
நாங்கள் மூவரும் தனியாக ஒருவரை ஒருவர் சந்தித்தபோது, எங்களை அந்த மாடல் வாலிபர் ஏமாற்றியதை தெரிந்து கொண்டோம். அந்த வாலிபரை பற்றி விசாரித்ததில் எங்களைப்போன்ற இன்னும் ஏராளமான பெண்களை தனது காதல் வலையில் விழ வைத்து, அவர்களது கற்பை சூறையாடி இருப்பதும் தெரிய வந்தது.
காம இச்சைக்கு எங்களை பயன்படுத்திய அந்த மனித மிருகத்தை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வாங்கி கொடுக்க சபதம் போட்டு, நாங்கள் இந்த புகார் மனுவை கொடுத்துள்ளோம்.
எங்களது பெற்றோருக்கு தெரியாமல் நாங்கள் இந்த புகார் மனுவை கொடுத்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் என அந்த பெண்கள் புகார் மனுவில் தெரிவித்தனர்.
அந்த புகார் மனுவை ரகசியமாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால், கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயனுக்கு உத்தரவிட்டார்.
அதன் பேரில், அவரது தலைமையில், வேப்பேரி உதவி கமிஷனர் அரிக்குமார், வேப்பேரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் இதற்காக பணியமர்த்தப்பட்டனர்.
அந்த காமுகன் பெயர் முகமது சையது (வயது 26) என்பதை மையப்படுத்தி தனிப்படை போலீசார் நடத்திய விசாரணைத்தனர்.
புரசைவாக்கம் மில்லர்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர். பி.காம். பட்டதாரியான இவர் விளம்பர படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் பெண்களை மயக்கி உடலுறுவு கொண்டு பின்னர் பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில் முகமது சையது மீது கற்பழிப்பு, நம்பிக்கை மோசடி மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர் அவன் போலிசாரிடம் வாக்குமூலம் அளித்தான், அதன் விவரம் வருமாறு:-
நான், சாதாரண நடுத்தர குடும்பத்தைச்சேர்ந்தவன். சின்ன வயதிலேயே நான் அழகாக இருப்பேன். பள்ளி பருவத்தில் இருந்தே எனது காதல் விளையாட்டு தொடங்கி விட்டது. அப்போதே பெண்களிடம் உடல் ரீதியாக உறவு வைக்க தொடங்கினேன்.
கல்லூரி படிப்பு முடித்து விட்டு, நல்ல கட்டுமஸ்தான உடல் வாகு இருந்ததால், மாடலிங் தொழிலில் புகுந்தேன். அங்கு நிறைய பெண்களிடம் பழக வாய்ப்பு கிடைத்தது. காதலை சொல்லி பழகுவேன். எனது அழகை கண்டு மயங்கிய பெண்களை எனது காமவலையில் வீழ்ந்தனர்.
கொஞ்ச நாள் பழகினால் போதும் பெட்ரூமுக்கு கூட்டிக்கிட்டு போய்விடுவேன்.
பழகிய சில நாட்களில் படுக்கையை பகிர்ந்து கொள்வேன். ஒத்துவராத பெண்களை திருமண ஆசைகாட்டி அனுபவித்து விடுவேன்.
திருமண ஆசைக்கும் ஒத்து வராத பெண்கள் கழுத்தில் போலியாக தாலி கட்டியதும் உண்டு. சில நாட்கள் அவர்களோடு வாழ்வேன். அதன் பிறகு ஏதாவது காரணம் சொல்லி கழற்றி விட்டுவிடுவேன்.
என்னிடம் உறவு கொண்ட பெண்களின் புகைப்படம், அவர்களோடு நான் உறவில் இருக்கும் படங்களை தேதி வாரியாக பட்டியல் போட்டு பாதுகாப்பாக வைத்துள்ளேன். அந்த வகையில் என்னிடம் 20 பெண்களின் பட்டியல் உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக இது தான் என்னுடைய பிரதான வேலை என்று நக்கலாக சொல்லியிருக்கிறார் முகமது சையது.