ஜல்லிக்கட்டு போட்டி நடந்தே தீரும்:- தமிழக அரசு வெளியிட்ட அரசாணை! முகூர்த்தகால் நட்டு குஷி!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,
கொரோனா மற்றும் ஒமைக்ரான் விதிமுறை கெடுபிடிகளுக்கு மத்தியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்குமா என்று காத்திருந்த நிலையில், தமிழக அரசு அனுமதியளிப்பதாக அரசாணை வெளியிட்டிருக்கிறது.
அதில் சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 300 மாடுபிடி வீரர்களை கொண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் என்றும் 2 தவணை தடுப்பூசி செலுத்திய வீரர்கள் மட்டும் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது.
பொங்கல் பண்டிகை தினங்களில் தென்தமிழகமான அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடக்கும்.
குறிப்பாக, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்ஜல்லிக்கட்டு விளையாட்டை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
அப்படியிருக்க இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு நடைபெறுமா? என பலரும் கவலையில் இருந்த சூழலில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதனால் குஷியான கமிட்டியினர், ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்து வருகிறார்கள்.
முன்னதாக அலங்காநல்லூரில் வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பாக ஜல்லிக்கட்டுக்கான முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியும் இன்று அதிகாலை நடைபெற்றது.
அதில், 300 மாடுபிடி வீரர்களை கொண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் என்றும் 2 தவணை தடுப்பூசி செலுத்திய வீரர்கள் மட்டும் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின், அரசாணையால் தென் தமிழகத்தினர் குஷியாகியுள்ளார்கள்.