ரோடு போடற பணத்துல கார்பந்தயமா? வி.கே.சசிகலா!

உ.சசிகுமார்,
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க.பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில் மாநகரின் சாலை போன்ற விரிவாக்கத்துக்காக பயன்படுத்தப்பட வேண்டிய தொகையை அரசு கார் பந்தயத்துக்காக பயன்படுத்துவது தேவையற்றது. ஏற்கனவே அம்மா (ஜெ) ஆட்சியில் இருங்காட்டுக் கோட்டையில் பெரிய கார் பந்தய மைதானம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதை தவிர்த்துவிட்டு 240 கோடி ரூபாய் செலவில் சிட்டியின் மையப்பகுதியில் கார் ரேஸிக்கு மைதானம் தேவையா?
இரண்டே நாட்கள் தான் அதிலும் ஒருநாளைக்கு மூன்று மணி நேரம் கார் ஓடுவதற்கு இது தேவையா? அதிலும் ஒலி மாசு ஏற்படுத்தக்கூடிய அந்த கார் பந்தயத்தை மாநகரின் மத்தியில் நடத்தலாமா? என்றார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழக அரசு எதற்கெடுத்தாலும் பணம் இல்லை என சொல்கிறது. ஆனால், தமிழக அரசு, சிஎம்டிஏ, சென்னை மாநகராட்சி, தனியார் பங்களிப்பு என மொத்தம் ரூ.240 கோடி செலவில் கார் பந்தயம் நடத்த போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டனர்.
இதற்கான தொகை எங்கிருந்து வருகிறது. இதனால் மக்களுக்கு என்ன பயன், ஆனால் பேரிடரின் போது மக்களை மீட்க போர்க்கால அடிப்படையில் பணிகளைச் செய்யவில்லை. விளம்பரத்தை மட்டுமே திமுக அரசு நம்பியிருக்கிறது. கல்விக் கடனை ரத்து செய்யவில்லை.
பால் தட்டுப்பாடு நிலவுகிறது. தமிழக மக்களை காப்பாற்றும் கடமை எங்களுக்கு இருக்கிறது. இங்கு திமுக ஆட்சி தொடர்ந்தால் இலங்கைக்கு ஏற்பட்ட நிலைதான் வரும். அதை மக்களும் உணர்ந்துள்ளனர்.
தற்போது திமுக அரசு தெளிவில்லாமல் செயல்பட்டு வருகிறது. அவர்கள் தங்களை திருத்தி கொண்டுவாக்களித்த மக்களை வஞ்சிக்காமல் இருக்க வேண்டும்.
அதிமுகவின் அனைத்து அணிகளையும் சேர்க்க முடியும். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கருத்துகளை நிறைவேற்றும் பொறுப்பு பிரிந்த அனைத்து அணியினருக்கும் இருக்கிறது. விரைவில் நல்ல முடிவு வரும் என்று பேசினார்.