தமிழக மாங்காய்களை திருப்பியனுப்பும் ஆந்திர எல்லை அதிகாரிகள்!

ஜி.கே.சேகரன்,
தமிழக அரசு ஒரு டன் மாம்பழத்துக்கு 12,000 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் மா விளைச்சல் அதிகம் உள்ள மாவட்டங்களில் மாம்பழ ஜூஸ் ஆலைகள் உடனடியாக அமைக்க வேண்டும், தமிழக மாங்காய்களை ஆந்திர எல்லை அதிகாரிகள் திருப்பி அனுப்பக்கூடாது என்பதை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில், காட்பாடி கே.வி.குப்பம் குடியாத்தம் பேரணாம்பட்டு கணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் மா சாகுபடி செய்யப்பட்டு வருகி8றது.
இந்நிலையில் ஆந்திராவில் வழங்குவதைப் போல மா விவசாயிகளுக்கு ஒரு டன் மாம்பழத்திற்க்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்க விலை நிரணயம் செய்ய வேண்டும் எனவும், மேலும் ராணிப்பேட்டை வேலூர் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி தேனி உள்ளிட்ட மா விவசாயிகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் உடனடியாக மாம்பழ கூழ் ஆலைகளை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்திருக்கிறது.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி குடியாத்தம் காந்தி நகர் பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பின்பு பேசிய விவசாய சங்க நிர்வாகிகள்விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் மா பயிர்களுக்கு நிரந்தர விலையை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும்.
எனவும் மேலும் ஆந்திராவில் வழங்குவதைப் போல ஒரு டன் மாங்காய்க்கு 12 ஆயிரம் ரூபாய் விலை நிர்னயணம் செய்ய வேண்டும்.
மேலும் தமிழகத்தில் இருந்து மாங்காய்களை ஆந்திர மாநிலத்தில் உள்ள மாம்பழ சாறு ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படும் தமிழக வாகனங்களை தற்போது திருப்பி அனுப்பிவிடப்படுவதாகவும் எனவே இது குறித்து உடனடியாக வேலூர் மாவட்ட நிர்வாகம் ஆந்திர மாநில அரசுடன் பேசி இதற்கு சமூக தீர்வு எட்டப்பட வேண்டும்.
இல்லை என்றால் தொடர் போராட்டங்களை விவசாயிகள் மேற்கொள்ள நேரிடும் எனவும் விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர்.