வாணியம்பாடி வசீம் அக்ரம் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது!

வாணியம்பாடி வசீம் அக்ரம் கொலை வழக்கில் மேலும்  4 பேர் கைது!

இம்மி,

கடந்த 10 ஆம் தேதி வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் மஜக நிர்வாகி வசீம் அகரம் 8 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு,இ.கா.ப.,அவர்கள்,3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை பிடிக்க சென்னை, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

 கடந்த 10 ஆம் தேதியே  காஞ்சிபுரம் மாவட்டம் பாலு செட்டி சத்திரம் என்ற  இடத்தில் போலீசார் வாகன சோதனையில் வண்டலூர்  பகுதியை சேர்ந்த டில்லி குமார்,ஓட்டேரி பகுதியை சேர்ந்த பிரசாந்த்2 பேர் கைது செய்யப்பட்டனர்.

 அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் டீல் இம்தியாஸ் கூறியதில் பேரில் கொலை செய்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

 மேலும் கடந்த ஜூலை மாதம் 26 ஆம் தேதிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி  டீல் இம்தியாஸ் குடோனில். சோதனை நடத்தி 8 கிலோ கஞ்சா 10 பட்டா கத்திகள்,செல் போன்கள் ஆகியவை பறிமுதல் செய்ததும் அப்போது 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் டீல் இம்தியாஸ் மற்றும் செல்வ குமார் ஆகியோரை போலீசார் தேடி வந்ததும் கஞ்சா பதுக்கல் குறித்து  காவல் துறைக்கு வசீம் அக்ரம் தகவல் கொடுத்தாக  டீல் இம்தியாஸ் தரப்பு கருதியுள்ளது.

ஆகவே வசீம் அக்ரமை திட்டமிட்டு கொலை செய்ய கூலி படையை அனுப்பியதாக  கூறப்படுகிறது.

 இப்பிரச்சனையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி பணியிடமற்றம் செய்யப்பட்டார்.

 நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

 பின்னர் இந்த வழக்கை விசாரிக்க விசாரணை அதிகாரியாகவும்,  நகர காவல் ஆய்வாளராகவும் நாகராஜ் என்பவரை நியமித்து வேலூர் சரக டிஐஜி பாபு உதவிட்டார்.

 இந்நிலையில் இந்த வழக்கில் செல்வகுமார்,முனீஸ்வரன்,சத்தியசீலன்,அகஸ்டின், அஜய்,பிரவீன் குமார் ஆகிய 6 பேர்  நீதிமன்றத்தில் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜார் ஆனார்கள்.

  முக்கிய  குற்றவாளியாக கருதப்பட்ட டீல் இம்தியாஸ் சிவகாசி நீதி மன்றதில் சரணடைந்தனர்.

இந்நிலையில் தொடர்ந்து அதிகாரி நாகராஜ் நடத்திய விசாரணையில்ஆயுதங்கள் கொண்டு சேர்த்தல்,  கொலை செய்ய  ஆட்கள் நடமாட்டம் குறித்து கண்காணித்து

இந்த கொலைக்கு உதவியாக இருந்ததாக வாணியம்பாடி பகுதியை சேர்ந்த நயீம் பாஷா,பைசல் அகமது,யூசுப் ஜமால், முகமது அலி  ஆகிய 4 பேரை கைது செய்துள்ளார்.

இந்த கொலை வழக்கில் போலீசார் நடத்தி வரும் தொடர் விசாரணையில் அடுத்தடுத்து இந்த வழக்கில்  சம்பந்தபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்படலாம் என்று காவல் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

குறிப்பாக கொலை செய்ய பயன்படுத்திய கத்திகள் எங்கிருந்து பெறப்பட்டது என்று விசாரிக்கிறார்களாம்