ஆம்னி வேனில் மணல் கடத்தல்:- டி.எஸ்.பி. கண்டு கொள்ளாததால் எஸ்.பி.நடவடிக்கை!

ஆம்னி வேனில் மணல் கடத்தல்:- டி.எஸ்.பி. கண்டு கொள்ளாததால் எஸ்.பி.நடவடிக்கை!

ஜி.கே.சேகரன்,

    குடியாத்தம் சப்டிவிஷனுக்குட்பட்ட பகுதியில், மாருதி ஆம்னி வேனில் மணல் கடத்தும் கும்பலைப் பற்றி உள்ளூர் டிஎஸ்பி க்கு பலர் போன் செய்து முறையிட்டிருக்கிறார்கள். ஆனால் வழக்கம் போலவே "குச்சி பி நகிஹை" தான்.

லிதனால் பொதுமக்கள் வேலூர் எஸ்.பி.க்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர், துரித ந்டவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டதால், வேறு வழியின்றி,  மணல் கடத்திய ஆம்னி கார் மற்றும் மணல் மூட்டைகள் பறிமுதல் செய்தனர்.

 இருப்பினும் -ஓட்டுனரை கைது செய்யாமல் தப்பவிட்டனர்.

 வேலூர் மாவட்டம்  குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கவுண்டன்யா ஆறு மற்றும் பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் தொடர்ந்து சட்டவிரோதமாக சிலர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஷ் கண்ணன் .ஐ.பி.எஸ். அவர்களுக்கு ரகசிய தகவலின் அடிப்படையில்  உத்தரவின்பேரில் குடியாத்தம் தாலுக்கா போலீசார் இன்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

 அப்போது குடியாத்தம் அருகே சின்னலாப்பள்ளி பகுதியில் சந்தேகத்திற்கிடமான வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அதில் மணல் மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

 இதனையடுத்து சட்டவிரோதமாக மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி கார் மற்றும் மணல் மூட்டைகளை பறிமுதல் செய்த குடியாத்தம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 ஆனால் டிரைவர் தப்பி ஓடிவிட்ட நிலையில் அவரை தீவிரமாக தேடுகிறார்களாம்.

அது சரி,