நோயாளிகளிடம் ரூ.50 மற்றும் ரூ.100 பணம் பறிக்கும் அரசு மருத்துவமனை ஊழியர்கள்!

ஜி.கே.சேகரன்,
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தையின் விரலை வெட்டிய செவிலியர் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரியும் மருத்துவமனையின் சீர்கேட்டை கண்டித்தும் கணியம்பாடியில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் கர்பினி தாய்மார்களை தரக்குறைவாக பேசும் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பிரசவ வார்டில் குழந்தையின் விரலை வெட்டிய செவிலியரை பணி நீக்கம் செய்ய கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் மார்சிஸ்ட் லெனின்னிஸ்ட் கட்சியின் சார்பில் மாணிக்கம் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
வேலூர்மாவட்டம், கணியம்பாடி பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற இதனை மாவட்ட செயலாளர் சரோஜா துவங்கி வைத்தார்.
இதில் மருத்துவமனையில் குழந்தையின் விரலை வெட்டிய செவிலியரை இடமாற்றம் செய்து ஏமாற்ற கூடாது. அவரை பணியிலிருந்து நீக்க வேண்டும்.
மருத்துவமனையில் சுகாதாரமான குடிநீர் அனைத்து நோயாளிகளுக்கும் வழங்க வேண்டும். ஏழை எளிய மக்கள் பிரசவத்திற்காக வரும் நிறைமாத கர்பினிகளை செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் தரக்குறைவாக பேசுகிறார்கள்.
அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு மருந்து மாத்திரைகளை எழுதி கொடுத்து வெளியே வாங்கி வர சொல்கின்றனர்.
மேலும் தூய்மை பணியாளர்கள் வார்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் ரூ.50 மற்றும் ரூ.100 பணம் கேட்டு வசூலிக்கின்றனர் இதனை தடுக்க வேண்டுமென இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் திரளானோர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.