அரசு முத்திரை போல் தயார் செய்து மோசடி! மூவருக்கு குண்டாஸ்!

அரசு முத்திரை போல் தயார் செய்து மோசடி! மூவருக்கு குண்டாஸ்!

கு.அசோக்,

 அரக்கோணம் அருகே போலி அரசு ஆவணங்கள் அரசு முத்திரைகள் செய்து மோசடியில் ஈடுபட்ட மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது மாவட்ட ஆட்சியர் உத்தரவு..

 இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட அம்மனூர் பகுதியில் போலி அரசு முத்திரைத்தாள்கள் பயன்படுத்தி போலி அரசு ஆவணங்களை தயார் செய்து மோசடியில் ஈடுபட்ட வழக்கில் குணசேகரன்(62) ராஜ்குமார் (65) நித்தியானந்தம் (55)ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

 அவர்கள் சிறையில் உள்ள நிலையில் மூன்று பேர் மீது குண்டர் சட்டத்தில் அடைக்க இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தர் சுக்லா பரிந்துரைத்தார். ஆகவே அவர்களை கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவு பிறப்பித்துள்ளார்

 மாவட்ட ஆட்சியர் உத்தரவை அடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான நகலை. நேற்று வேலூர் மத்திய சிறையில் உள்ள  குணசேகரன் ராஜ்குமார் நித்தியானந்தம் ஆகிய மூவரிடம் வழங்கப்பட்டது.