குறை பிரசவ விமர்சனம்! மன்னிப்பு கேட்ட முருங்காய் பாக்யராஜ்!

ம.பா.கெஜராஜ்,
பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று பேசிய இயக்குனர் கே.பாக்கியராஜ் திடீரென்று மன்னிப்பு கோரினார்.
சென்னையில் பாஜக அலுவலகத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாக்யராஜ் பங்கேற்று பேசினார்.
அப்போது பாக்கியராஜ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. நிகழ்ச்சயில் பேசிய அவர், ‘பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் 3 மாதத்தில் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள். ஏன் நான் இதை சொல்கிறேன் என்றால் 3 மாத குழந்தைக்குத்தான் வாய், காது இருக்காது’ என சொன்னார்.
குறை பிரசவம் என பாக்கியராஜ் கூறிய கருத்து மாற்றுத்திறனாளிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்தனர்.
பின்னர் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்ற தனது கருத்துக்கு இயக்குநர் பாக்யராஜ் மன்னிப்பு கோரி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், தனது கருத்து புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்பதாக கூறிய அவர், குறை பிரசவம் குறித்த தனது கருத்து தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டது என்றும், குறை பிரசவத்திற்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் சம்பந்தமில்லை என்றும் தெரிவித்தார்.
பாக்யராஜ் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று 'டிசம்பர் 3' இயக்கத்தைச் சேர்ந்த தீபக் வலியுறுத்தியுள்ள நிலையில் அவர் மன்னிப்பு கோரியிருக்கிறார்.
பிரதமரை விமர்சிப்பவர்களை குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று ஒரு உவமையாக சொல்லியிருக்கிறார்கள். இது மனவருத்தத்தை அளிப்பதாக உள்ளது. உங்கள் அரசியல் எதிரிகளின் மீது விமர்சனத்தை வைப்பதற்காக மாற்றுத்திறனாளிகளின் இயலாமையை உவமைப்படுத்தி சொல்லாதீர்கள். இது அருவருக்கத்தக்கது என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் ஆணையம் உடனடியாக இதில் தலையிட்டு சரத்து 92 ஒன்றுக்கு கீழே இதை வழக்காக பதிவு செய்து இயக்குனர் பாக்கியராஜூக்கு தகுந்த தண்டனை தர வேண்டும் என்று தீபக் கூறியது நினைவுகூறத்தக்கத்தாகும்