கோட்டையை பாஜகவினர் தூய்மைப்படுத்தக் கூடாது! விரட்டிய காவல் துறை!

கோட்டையை பாஜகவினர் தூய்மைப்படுத்தக் கூடாது! விரட்டிய காவல் துறை!

ஜி.கே.சேகரன்,

  வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டை இந்தியாவின் முதல் சுதந்திரத்திற்கு வித்திட்ட இடமாகும், அப்படி சுதந்திரம் பெற முக்கிய பங்காற்றிய இடங்களாக விளங்கும் இடங்களை பாரதியஜனதா கட்சியின் இளைஞரணி சார்பில் தூய்மைப்படுத்த வேண்டுமென பாஜக தலைமை அறிவித்தது.

  அதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ் குமார் தலைமை தூய்மைப்படுத்த முயன்ற போது அவர்களை அனுமதிக்காமல் காவல்துறை தடுத்து நிறுத்தி வெளியேற்றியதால் பதட்டம் காணப்பட்டது

   இதுகுறித்து சுரேஷ்குமார் கூறுகையில் சுதந்திரத்திற்கு முக்கிய இடமாக திகழ்ந்த கோட்டையை நாங்கள் சுத்தம் செய்ய முயன்ற போது தமிழக காவல்துறை எங்களை தடுத்து நிறுத்த சுத்தம் செய்யவிடாமல் வெளியேற்றியது கண்டிக்கதக்கது தமிழகத்தில் ஆளுநருக்கும் பாதுகாப்பில்லை துப்புரவு செய்யும்  எங்களுக்கும் பாதுகாப்பில் தொல் பொருள் துறை அனுமதி வழங்கினாலும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியது கண்டனத்திற்குரியது என்று கூறினார்.