அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு சான்று கொடுங்க! இல்லையேல் நடவடிக்கை பாயும்!! தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை!

கு.அசோக்,
பள்ளிகளில் மேலாண்மை குழு ஏற்படுத்தப்படும் - பள்ளிகளில் இடைநிற்றல் இல்லாமல் மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை அரசு பள்ளிகளில் சேர வரும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு சான்றுகளை வழங்காத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேட்டி
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பள்ளியில் மேலாண்மை குழு அமைப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த விழிப்புணர்வு வாகனங்களை கலெக்டர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப. கொடியசைத்து துவங்கி வைத்தார்.
முதற்கட்டமாக 151 அரசு நடுநிலைப்பள்ளிகளில் மேலாண்மை குழு மறுகட்டமைப்பு நடைபெறவுள்ளது இதில் பெற்றோர்கள் உள்ளாட்சிப்பிரதிநிதிகள் பள்ளி ஆசிரியர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வாகனங்கள் செல்கிறது
பின்னர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மேலாண்மை குழு ஏற்படுத்தப்படவுள்ளது இம்மாவட்டத்தில் கொரோனா காலத்தில் பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் இருந்தது.
தொடர்ந்து மாணவர்களை பள்ளிகளில் சேர்க்கும் பணி நடந்து வருகிறது, நாடோடி குழந்தைகள் கல்வி பயில் கண்காணிப்பு குழு விரைவில் ஏற்படுத்தப்படவுள்ளது.
இம்மாவட்டத்தில் இடைநிற்றல் முதலில் அதிகம் இருந்தது இப்போது குறைக்கப்பட்டுள்ளது தனியார் பள்ளியில் உள்ள மாணவர்கள் அரசு பள்ளியில் சேர முன் வரும் போது தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு சான்றுகள் வழங்காமல் அலைகழித்தால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.