. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றிய ஆணையர்! கதறி அழுத மூதாட்டி!

. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றிய ஆணையர்! கதறி அழுத மூதாட்டி!

ஜி.கே.சேகரன்,

எழுபது வருடமாக அரசு புறம்போக்கு இடத்தில் வசித்து வந்தவரின் வீட்டை நகராட்சி நிர்வாகம் இடித்ததால் பரபரப்பு. நடுரோட்டில் அந்த வீட்டில் வசித்து வந்த பெண் அழுத காட்சி நெஞ்சை உருக்கியது

 திருப்பத்தூர் மாவட்டம் ,ஜோலார்பேட்டை அடுத்த சுண்ணாம்பு கல் பகுதியில் வசிப்பவர் கோபால் மற்றும் வனிதா.

 இவர் தற்பொழுது வரை சுமார் 70 வருடங்களாக அதே இடத்தில் வசித்து வருகின்றார்.  இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் சிவராஜ் என்பவர் உடற்பயிற்சி நிலையம் அமைக்க இவர்கள் வசித்து வந்த வீட்டை விலைக்கு பேசியுள்ளார்.

 ஆனால் இவர்கள் அந்த இடத்தை விற்க மறுத்து விட்டதால் இவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சிவராஜ், ஷீலா அவரது கணவர் சதீஷ்  மற்றும் சுமதி வசித்துக் கொண்டிருக்கும் வீடு அரசு புறம்போக்கு இடத்தில் உள்ளதாக கூறி நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  இதனைத் தொடர்ந்து நகராட்சி இவர்கள் வீட்டை அப்புறப்படுத்த இதற்கு முன்பு இரண்டு முறை முயற்சி செய்துள்ளனர். இதனால் நீதிமன்றத்தை நாடி ஷீலா மற்றும் சுமதி வழக்கு தொடர்ந்த நிலையில் நீதிமன்றம் அரசுக்கு சாதகமாக வழி காட்டியது.

  எனவே இன்று நகராட்சி ஆணையாளர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் ஜேசிபி  இடிக்க முயன்றனர்.இந்நிலையில் தாங்கள் காலம் காலமாக வாழ்ந்த வீட்டை இடிக்கக் கூடாது என்று ஷீலா மற்றும் சுமதி தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 ஆனால் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படிதான் வீட்டை இடிக்கிறோம் என்று கூறி நகராட்சி ஆணையர்  வீட்டை இடித்துவிட்டு சென்றதால் நடுரோட்டில் அமர்ந்தபடி அந்த வீட்டில் வசித்த பெண் அழுது கொண்டிருந்த காட்சி அங்கிருந்த பொதுமக்கள் மனதில் உருக்கத்தை ஏற்படுத்தியது.