பிளாஸ்ட்டிக் விற்பனையை ஓடியாடி தடுக்கும் கலெக்டர்!

கு.அசோக்,
சோளிங்கர் நகராட்சியில் 8 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்த ஆட்சியர்..
இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்டு உள்ள பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கவும், பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக உருவாக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் திரு பாஸ்கர பாண்டியன் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.
அந்த வகையில் இன்று சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பாஜார் பகுதிகளில் திடிரென ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அதிரடியாக பல்வேறு கடைகளில் பயன்படுத்தி வந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அந்தந்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தார்.
மேலும் கணபதி நகர் பகுதியில் குடோனில் விற்பனைக்காக பதிக்கி வைக்கப்பட்டு இருந்த 8 டன் பிளாஸ்டிக் பொருட்களை ஆட்சியர் நேரடியாக சென்று பறிமுதல் செய்து குடோன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க நகராட்சி ஆணையாளர்க்கு உத்தரவிட்டார்..