இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்! பிரசாந்த் கிஷோர் காங் கட்சியில் சேர்க்கப்படுவாரா?

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்! பிரசாந்த் கிஷோர் காங் கட்சியில் சேர்க்கப்படுவாரா?

 ம.பா.கெஜராஜ்,

கரைந்து போன காங்கிரஸ் கட்சியை கரை சேர்ப்பேன் என்று களம் இறங்கியிருக்கும் பிரசாந்த் கிஷோர் வெல்வாரா? தற்போதைய அரசியல் உலகில் இதுதான் மெகா டன் கேள்வியாக உள்ளது.

 2019-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் ஆகட்டும், அதன் பின்னர் பல மாநில சட்டசபை தேர்தல்கள் ஆகட்டும் காங்கிரஸ் கட்சி மண்ணை கவ்வியது. இதில் தமிழகத்தில் மட்டும் விதிவிலக்கு, திமுக கூட்டணியால் கொஞ்சம் மானம் காக்கப்பட்டிருக்கு.

 இருந்தாலும் காங்கிரஸ் கட்சிக்குள் புகைச்சல் கிளம்பியது. சோனியாவை தலைவர் பதவியில் இருந்து சோனியாவும், ராகுலும் ஒதுங்க வேண்டுமென, சீனியர் குலாம்நபி ஆசாத் தலைமையில் 23 காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் ஒன்றிணைந்தார்கள். கட்சியை மாற்றி கட்டமைக்க வேண்டும் என்கிற அஜெண்டாவையும் அளித்தார்கள்.

 அதனைத் தொடர்ந்து அக்கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் அடுத்த மாதம் ராஜஸ்தானில்  நடைபெற உள்ளது.

    மேலும்,செப்டம்பர் மாதத்திற்குள் காங்கிரஸ்  உள்கட்சி தேர்தலையும் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது. அநேகமாக அதில் காங்கிரஸ் நிர்வாகிகளை அடியோடு மாற்றி அமைக்க சோனியா திட்டமிட்டுள்ளதாவும் தெரிகிறது.

 இப்படிப்பட்ட சூழலில்தான் தேர்தல் ஏஜெண்ட் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேர முயன்று வருகிறார்.

 அதற்காக அவர் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற செய்ய அவர் புதிய வியூகங்கள் உள்ளதாக சொல்லி சோனியாவை சந்தித்துள்ளார்.

 வெறுமேன சந்தித்துவிட்டு வராமல், அவர்  சோனியாவுடன்  மூன்று நாட்கள்ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில் அவர் பல்வேறு குற்றங்களை விவரித்தார். குறிப்பாக 11 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டியதின் அவசியத்தை சுட்டிக் காட்டினாராம்.

  அதற்கு பரிசாக தமக்கு அதிகாரம் படைத்த உயரிய பதவி தந்து கவுரவிக்க வேண்டும் என்று செக் வைத்துள்ளார். (கட்சி தலைவர் பதவிக்கு குறி?)

 ஏற்கனவே அவர் மம்தா பானர்ஜி, மு.க ஸ்டாலின், ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, உத்தவ் தாக்கரே, கே. சந்திரசேகர் ராவ், மு.க.ஸ்டாலின் போன்ற பல முதல்வர்களுடன் டச்சில் இருப்பதால் அடுத்த பிரதம்னராவதற்கு கூட திட்டமிடப்படுவதாக கூறப்படுகிறது.

 இந்நிலையில் மேற்கண்ட முதல்வர்களுடன் இணக்கமாக பேசி 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக அல்லாத ஆட்சி அமைக்க முயல்வோம் என்கிர ஸ்லோகத்தை அவர் முன் வைக்க உள்ளார்.

   இது ஒரு பக்கம் இருக்க காங்கிரஸ் கட்சியில் கொண்டுவரப்பட வேண்டிய மாற்றங்கள் என்னென்ன என்பது குறித்த தகவல்  வெளியாகியுள்ளது.

* வாரிசு அரசியலை தடுக்க, ஒரு குடும்பத்தில்  ஒருவருக்கு மட்டுமே காங்கிரசில் பதவி

* கட்சி, 2014 முதல் 24 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஒரு நாடு தழுவிய போராட்டத்தை நடத்தவில்லை.1990 இல் ராஜீவ் காந்தியால் மேற்கொள்ளப்பட்ட பாரத யாத்திரை தான் கடைசி வெகுஜன மக்கள் பிரச்சாரம்.

* மத்திய தலைமையின் 118 பேரில் 23 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்; 66 செயற்குழு உறுப்பினர்களில் இருவர் மட்டுமே 45 வயதிற்குட்பட்டவர்கள்.

* காங்கிரஸ் தலைமையில் காந்தி குடும்பம் அல்லாதவர் கட்சித் தலைவராக இருந்தால் "உயர்ந்த" தாக்கத்தை ஏற்படுத்தும் .ராகுல் காந்தியை மக்களவையில் கட்சியின் தலைவராகவும் முன் நிறுத்த  வேண்டும்.

* தலைமை பதவி  சிக்கலை சரிசெய்ய, விளக்கக்காட்சியில்  இரண்டு  பரிந்துரைகள் அளிக்கபட்டது. கட்சித் தலைவராக சோனியா காந்தியும், பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியும், பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி வதேராவும், காந்தி குடும்பம் அல்லாத ஒருவர்  துணைத் தலைவராகவும் இருக்கவேண்டும்.

* மற்றொரு பரிந்துரையில் காந்தி குடும்பம் அல்லாதவர் காங்கிரஸ் தலைவராகவும், சோனியாவை கூட்டணி  தலைவராகவும், ராகுல் பாராளுமன்ற கட்சி  வாரியத் தலைவராகவும், பிரியங்கா பொதுச் செயலாளர் அல்லது  ஒருங்கிணைப்பாளராகவும் இருக்க வேண்டும்.

* நாடாளுமன்றக் கட்சியின் தலைவராக ராகுல் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் மக்களின் குரலை திறம்பட பிரதிநிதித்துவப்படுத்தி, மோடிக்கு எதிராக அவரை களமிறக்க முடியும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

* கூட்டணி பிரச்சினையை சரி செய்தல்.கூட்டணியைப் பொறுத்தவரை, காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது  குறைவான தேர்தல் வெற்றியைப் பெறும், ஆனால் எதிர்காலத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். 70 முதல் 75 சதவீத மக்களவைத் தொகுதிகளில் அக்கட்சி போட்டியிடும் காங்கிரஸ் பிளஸ் மாதிரியை விரும்புகிறது.

மராட்டித்தில் தேசியவாத காங்கிரஸ்  ஆந்திராவில் ஒய்எஸ்ஆர்சிபி, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், தமிழ்நாட்டில் தி.மு.க.வுடன், ஜார்க்கண்டில் ஜே.எம்.எம்.  மூலோபாய பிராந்திய கூட்டணிகளை உருவாக்குவது.

* 15,000 அடிமட்டத் தலைவர்களைக் கண்டறிந்து  இந்தியா முழுவதும் 1 கோடி காங்கிரஸ் தொண்டர்களை களப்பணியில் ஈடுபட செய்தல்.

* 200+ ஒத்த எண்ணம் கொண்ட  சிவில் சமூக உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் அவர்களை ஒருங்கிணைத்தல், கருத்து வேறுபாடுகளை  களைந்து இணைந்து செயல்படுதலை உறுதி செய்ய வேண்டும்.

* அனைத்து மட்டங்களிலும் தேர்தல் மூலம் அமைப்புகளை மறுசீரமைத்தல். 

என பிரஷாந்த் கிஷோர் தயாரித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  பிராசாந்த் கிஷோரின் வியூகங்களை பெற்றுக் கொண்ட சோனியா அதன் தன்மையை ஆராய மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.

   மேற்படி இந்த மூன்று பேர் கொண்ட குழுவின் முடிவுக்கு பின் பிரசாந்த் கிஷோரின் உள்நோக்கம் வெளிப்படலாம். அதற்கு பின்னர் அவர் காங்கிரஸில் இணைக்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் எங்க கட்சியின் தேசிய அளவிளான எதிர்காலம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை.

  பா.ஜ.க. தங்களை எதிர்க்கும் லோக்கல் கட்சிகளை “பி டீம் “ஆக செயல்பட வைக்கிறது. அதை வைத்தே பல மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கிறார்கள்.

 சமீபத்திய உபி தேர்தலில் மாயாவதி மற்றும் ஒவைசி ஆகியோரின் செயல்பாடுகளே அதற்கு சான்று.

 இதையெல்லாம் தெரிந்தும் கூட அதை சரி செய்ய முடியாத கட்சியாக எங்கள் தலைமை உள்ளது.

ஆக காங்கிரஸ் கட்சிக்கு வேறு வழியில்லை, பிரசாந்த் கிஷோரை கட்சியில் இணைத்துக்கொண்டு முக்கிய பதவியை அவருக்கு அளித்ப்பதோடு,ம் அவர் வழிகாட்டுதலை பின்பற்றினால் தான் 2024 - இந்தியாவில் மாற்றம் ஏற்படும் என்கிறார்.