வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க அனுமதிக்கப்பட மாட்டாது!அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

க.பாலகுரு,
வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க அனுமதிக்கப்பட மாட்டாது! இது குறித்து முதலமைச்சர் அவர்கள் சட்டபேரவையில் அறிவிப்பார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டியளித்தார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் சீரிய திட்டங்களான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் இ-வாடகை குறித்தும் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-ஐஐ சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு தீனதயாள் உபாத்யா கிராமின் கௌசல்யா திட்டம் குடிநீர் விநியோகம் (ஊரகம்) உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும்,
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையின் சார்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் நமக்கு நாமே திட்டம் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் குறித்தும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசின் இ-சேவை மையம் பள்ளி கல்வித்துறையின் எண்ணும் எழுத்தும் இயக்கம் பள்ளி உட்கட்டமைப்பு அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் சிறப்பு திட்ட செயலாக்களான நான் முதல்வன் திட்டம் முதல்வரின் சிறப்பு திட்டாக்கப் பணிகள் செயல்பாடுகள் குறித்தும்,
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்பணிகள் அங்கான்வாடிகள் புதுமை பெண் திட்டம் குறித்தும் மருத்துவத்துறையின் மக்களை தேடி மருத்துவம் குறித்தும் முதல்வரின் முகவரி திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகள் முன்னேற்றம் குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் நடைபெற்றுவரும் திட்டப்பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் ,தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக்கழக தலைவர் உ.மதிவாணன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் .பூண்டி.கே.கலைவாணன், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா,திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து, மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன்,மாவட்ட வருவாய் அலுவலர்.ப.சிதம்பரம், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் பி.சந்திரா, வருவாய் கோட்டாட்சியர்கள் சங்கீதா,கீர்த்தனாமணி, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் .வடிவேல் மற்றும் அனைத்துதுறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க அனுமதிக்கப்பட மாட்டாது இது குறித்து சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என திருவாரூரில் உதயநிதிஸ்டாலின் பேட்டியளித்தார்.
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது...
பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம் தற்போது நடைபெற்றதாக தெரிவித்தார். மேலும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க அனுமதிக்கப்பட மாட்டாது இது குறித்து சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என உதயநிதி ஸ்டாலின் கூறினார்.