மண் உயிரோடு வாழ்ந்தால் தான் நாம் உயிரோடு வாழ முடியும்! கலெக்டர் உருக்கமான பேச்சு!

ஆர்.ரமேஷ்,
நாட்றம்பள்ளி ஒன்றியம், பச்சூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாமில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், மரக்கன்றுகள், உளுந்து ராகி விதைகள் பழச்செடிகள் தொகுப்பு மற்றும் காய்கறி விதை தொகுப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஒன்றியம், பச்சூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாமில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், மரக்கன்றுகள், உளுந்து ராகி விதைகள் பழச்செடிகள் தொகுப்பு மற்றும் காய்கறி விதை தொகுப்புகளை வழங்கி, கால்நடை மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (09.02.2023) துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
உலகிலேயே அதிகமான நெற்பயிர்கள் உடைய எண்ணிக்கை கொண்ட நாடு தமிழ்நாடு ஒவ்வொரு நற்பெயர்களுக்கும் என்னென்ன சிறப்புகள் என்று நமது முன்னோர்கள் வரையறை செய்து இருக்கிறார்கள். நம் முன்னோர்கள் வரையறுத்தபடி நாம் விவசாயம் செய்கிறோம் என்றால் அது இல்லை. கால்நடைகளை வளர்ப்பதை நாம் தவறி விட்டோம், நம்முடைய விவசாயத்தின் அடிப்படை கால்நடைகள். கால்நடைகள் தற்போது இல்லாத போனதால்தான் இப்போது நாம் பால் பாக்கெட்டை வாங்கும் நிலை வந்துள்ளது.
ஒரு மண் உயிரோடு வாழ்ந்தால் தான் நாம் உயிரோடு வாழ முடியும். நாம் என்ன நினைக்கிறோம் என்றால் அதிகமான விளைச்சல் தேவை என்று உரங்களை அதிகமாக பயன்படுத்தி விட்டோம். கால்நடைகளின் சாணம் மண்ணுக்கு முக்கிய உரமாகவும்.
இந்தியாவினுடைய முதல் நிதி மந்திரி திரு.சண்முக செட்டியார் ஆவார். அப்போது, டிராக்டர்களை பயன்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது அவர் டிராக்டர் சானம் போடுமா என்று கேள்வி எழுப்பினார். இவரை அனைவரும் வியப்போடு பார்த்தனர். திரு.சண்முகம் செட்டியார் அவர்கள் சாணம் போடாத எந்த ஒரு கருவியும் விவசாயத்திற்கு உகந்து அல்ல என்று கூறினார்கள்.
கால்நடைகள் சாணம் போடுவதன் மூலமாகத்தான் உலகமே பாதுகாக்கப்படுகிறது. மேலும் அனைத்து விவசாய பெருமக்களும் உரங்களை தேடி செல்கின்றனர். அதுமட்டுமில்லாமல் விவசாய நிலங்களில் மரங்களை வளர்ப்பதை தவிர்த்து விட்டோம். மரங்கள் அதிக அளவில் இருந்தால் தான் மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும். மரங்களை வளர்ப்பதன் மூலம் மண்ணிற்கு புரதசத்து கிடைக்கிறது. இந்த புரதச்சத்து பூமிக்கு கிடைக்கின்ற பொழுது தான் மண் வளமாக இருக்கும் மண் வளமாக இருக்கும் பொழுது தான் விளைகின்ற பொருட்கள் புரத சத்துடன் கிடைக்கும்.
விவசாயம் செய்கின்ற வேளாண் பெருங்குடி மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் உலகம் உங்கள் பின்னாடி தான் இருக்கின்றது. அதனால் அனைத்து விவசாய பெருங்குடி மக்களும் தரமான சத்துள்ள ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் பழ வகைகளை வழங்க வேண்டும்.
நீர்வளம் மற்றும் மண் வளம் இன்றி அமையாதது அதனால்தான் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் உங்களுடைய தரிசு நிலங்களை மாற்ற முடியும்.
நீர் வளத்தை பெற முடியும். இந்தத் திட்டத்தின் மூலம் நமது மண்ணின் நிலை குறித்து ஆராய்ந்து எந்த வகையான பயிர்களை பயிரிட வேண்டும் என்றும் பயிர் சுழற்சி முறையை கடைப்பிடிக்க வேண்டும். இவைகளை பயிரிடும் பொழுது வண்ணத்துப்பூச்சிகள், தேனிகள், வண்டுகள் போன்றவை பயிரிடுவதற்கு தேவையாக கருதப்படுகிறது.
தற்போது உள்ள காலகட்டத்தில் உரங்களை பயன்படுத்தி வண்டுகளை பூச்சிகளை நாம் கொல்கின்றோம். பூச்சிகள் வண்டுகள் நமது வாழ்வாதாரத்திற்கு இன்றியமையாதது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 2021-22 ஆம் ஆண்டில் 51 கிராமங்களிலும் 2022- 23 ஆம் ஆண்டல் 43 கிராமங்களிலும் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் (முயுஏஐயுனுறி) சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
15 கிளஸ்டர்களில் 13 கிளஸ்டர்கள் இந்த திட்டமானது செயல்படுத்தப்பட்டு போர் மோட்டார்கள் சரி செய்யப்பட்டு இருக்கிறது. நாட்றம்பள்ளி வட்டாரத்தில் 2021-22-ஆம் ஆண்டு கொண்டகிந்தனப்பள்ளி, சொரக்காயல்நத்தம், மல்லகுண்டா, தும்பேரி, பந்தாரப்பள்ளி, சிக்கனாங்குப்பம் மற்றும் கத்தாரியிலும் 2022-23 ஆம் ஆண்டில் 5 கிராமங்களான பச்சூர், ஆத்தூர்குப்பம், திம்மாம்பேட்டை, சங்கராபுரம் மற்றும் எக்லாஸ்புரத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் (முயுஏஐயுனுறி) சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சென்ற ஆண்டு 2021-22 -ல் கொண்டகிந்தனப்பள்ளி, சொரக்காயல்நத்தம், தும்பேரி, சிக்கனாங்குப்பம் ஆகிய கிராமங்கள் தொகுப்பு கிராமங்களாக சுமார் 60 ஏக்கர் சமன் செய்து விலை நிலங்களாக மாற்றி உளுந்து மற்றும் நிலக்கடலை பயிர் சாகுப்படி செய்யப்பட்டது. நான்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் பச்சூர் கிராமத்தில் இரண்டு தொகுப்புகள் கண்டறியப்பட்டு சுமார் 23 ஏக்கர் சமன் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் முயுஏஐயுனுறி கிராம விவசாயிகளுக்கு மான்ய விலையில் வரப்பு பயிரில் உளுந்து விதைகள், தென்னங்கன்றுகள், கைத்தெளிப்பான், விசைத்தெளிப்பான், பண்ணைக் கருவிகள், தார்பாலின்கள், ஜிப்சம், ஜிங்க் சல்பேட் இடுபொருட்கள் வழங்கப்படுகின்றன.
இந்தத் திட்டத்தின் மூலம் சூரிய ஒளியில் மோட்டார் வசதி, மின்சாரம் மூலம் இயங்கும் மோட்டார் வசதிகளை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள முடியும். நஞ்சை நிலமாக கருதாமல் புஞ்சை நிலமாக கருதி அனைத்து பயிர்களையும் இந்த திட்டத்தின் மூலம் பயிரிட முடியும், அனைத்து தரிசு நிலங்களும் விலை நிலங்களாக மாற்ற முடியும். இதன் மூலமாக உங்களின் வாழ்வாதாரம் மற்றும் அன்றாட பொருளாதாரம் உயரும்.
இந்தத் திட்டம் கிராமத்தில் ஊரக வளர்ச்சித் துறை, மகளிர் திட்டம், மீன் வளத்துறை, பட்டு வளர்ச்சித் துறை, வனத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வருவாய்த் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வேளாண் விற்பனை மற்றுமட வணிகத் துறை ஆகிய துறைகள் இணைந்து செயல்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நமது மாவட்டத்தில் வேளாண்மை துறை சிறப்பாக செயல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வில மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திரு.என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திரு.செல்வராசு, வருவாய் கோட்டாட்சியர் திருமதி.இலட்சுமி, வேளாண்மை இணை இயக்குனர் திருமதி.அ.பாலா வேளாண்மை துணை இயக்குனர்கள் திரு.சி.பச்சையப்பன், திரு.எஸ்.ராமச்சந்திரன், துணை இயக்குனர் தோட்டக்கலை திருமதி.எ.பாத்திமா, செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை திரு.ஆனந்தன், உதவி இயக்குநர் வேளாண்மை திரு.சுரேஷ், வட்டாட்சியர் திரு.குமார், நாட்றம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் திருமதி.வெண்மதி முனுசாமி ஊராட்சி மன்ற தலைவர் திரு.தியாகராஜன், மற்றும் கால்நடைத்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர்.