மாவட்ட காவல் அலுவலகம் அருகில் சாலையிலேயே  சரக்கு பார்! போலீஸ்காரரிடமே பணம் பறித்த வாலிபர் கைது!

மாவட்ட காவல் அலுவலகம் அருகில் சாலையிலேயே  சரக்கு பார்! போலீஸ்காரரிடமே பணம் பறித்த வாலிபர் கைது!

ஜி.கே.சேகரன்,

 ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் பிரதான் (வயது 48). ஜார்க்கண்ட் ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை செய்து வருகிறார். இவரது தாய் வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவததற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார்.

 அவர் காகிதப்பட்டறையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்து தன் மகனுடன் சிகிச்சைக்கு சென்று வந்தார்.

 இந்நிலையில், நேற்று மாலை 4 மணிக்கு காகிதப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே பிரதான் நடந்து சென்றபோது சத்துவாச்சாரியை சேர்ந்த ராஜேஷ் என்கிற மணி (25) பிரதான் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ 5 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றார்.

 இதுகுறித்து பிரதான் வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சத்தியவாணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் காகிதப்பட்டறை டாஸ்மாக் கடையில் மது வாங்க வந்த ராஜேஷை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய      சிறையில் அடைத்தனர்.

 மேற்படி சம்பவம் நடந்த பகுதியில் அருகருகில் டாஸ்மாக் கடைகள் உள்ளன. அங்கு எப்போதுமே ஜேஜே என்று கூட்டம் நிரம்பி வழியும். இவற்றின் அருகில் இல்லீகல் பார்கள் ஏராளமாக உள்ளன. இருந்தும் கூட குடிமகன்கள் சாலையில் அமர்ந்து குடித்து கும்மாளம் அடிக்கின்றனர்.

   அங்கு பணம் இல்லாத பார்ட்டிகள் சரக்கடிப்பவர்களிடம் பிச்சை எடுத்து குடிக்கிறார்கள். அப்படியும் கிடைக்காதவர்கள் இப்படி கொள்ளையடித்து சரக்கடிக்கிறார்கள்.

  தினமும் பல சம்பவங்கள் இது போல நடக்கிறது. இத்தனைக்கும் மாவட்ட காவல் அலுவலகம் அருகில் தான் இவையெல்லாம் நடந்து வருகிறது. கலால் போலீஸ் என்னதான் செய்கிறார்களோ?

சூப்பரு ஆபிசர்ஸ்.