பெண் ஆட்சியர்களின் சுற்றுச் சூழல் தின நடவடிக்கைகள்!

கு.அசோக்,
இராணிப்பேட்டை,
இராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தூய்மை பணிகளை செய்து சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை அமைச்சர் காந்தி துவங்கி வைத்தார்
இராணிப்பேட்டைமாவட்டம்,ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் மாவட்டம் முழுவதும் தூய்மை பணிகளை மேற்கொள்வதற்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அவர்கள் பங்கேற்று ஆட்சியர் அலுவலகம் சுற்றி உள்ள இடங்களில் இருந்த தேவையற்ற குப்பைகளை அகற்றி பணிகளை தொடங்கி வைத்தார்.
¢இதனை தொடர்ந்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
மேலும் மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூய்மை பணியாளர்கள் மற்றும் மகளிர் குழுவை சார்ந்த நபர்களிடம் அமைச்சர் காந்தி மஞ்ச பைகளை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்
வேலூர்,
உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு நெல்வாய் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி மரக்கன்றுகளை நட்டு துவங்கி வைத்தார்
வேலூர்மாவட்டம்,வேலூர் அருகேயுள்ள நெல்வாய் கிராமத்தில் இன்று உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் 35 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி துவங்கி வைத்தார் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன்,உள்ளிட்டோரும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இதே போன்று மாவட்டத்தில் புத்தூர்,அரும்பருத்தி,.குடியாத்தம் போன்ற இடங்களிலும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை ஆட்சியர் சென்று அங்கும் மரக்கன்றுகள் நடும் பணியை துவங்கினார் சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் உதவியோடு இம்மரக்கன்றுகள் மாவட்டத்தின் பல பகுதிகளில் நடக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இஸ்லாமிய பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் மாணவர்களுடன் கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இஸ்லாமிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் இன்று உலக சுற்று சூழல் தினத்தை யொட்டி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பச்சை தொப்பி அணிந்தும் மஞ்சள் பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சி தலைவர் சிவ சௌந்தரவல்லி தலைமை தாங்கினார். வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் ஹஜிதா பேகம், வாணியம்பாடி வட்டாட்சியர் உமா ரம்யா ஆகியோர் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மாணவிகளிடம் உலக சுற்றுச்சூழல் தினத்தை பற்றியும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்புரையாற்றினார்.
வாணியம்பாடி சென்னாபேட்டை பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி பூஜா ஸ்ரீ தென்னைமர நார்களில் இருந்து தயாரித்த சமையல் பாத்திரம் கழுவும் நார்களை கொண்டு வந்தார். அதை அனைவரும் வாங்கி பயன்படுத்தும் போது சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்று கூறி அம் மாணவியை ஆட்சியர் பாராட்டி வாழ்த்தினார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை அப்சா பர்வீன் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.