மக்கள் பணிகள் ஆய்வு! ஆட்சியரின் விசிட்!

 மக்கள் பணிகள் ஆய்வு! ஆட்சியரின் விசிட்!

த.நெல்சன்

 வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் மேல்பாடி ஊராட்சியில் பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ12.94 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் பாலம் அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மேல்பாலாறு வடிநில கோட்டம் செயற்பொறியாளர் திரு. ரமேஷ்,  உதவி செயற்பொறியாளர் திரு.கோபி, உதவி பொறியாளர் திரு.சிவசங்கரன், காட்பாடி வட்டாட்சியர் திரு.ஜெகன்நாதன் உட்பட பலர் உடன் இருந்தனர்.   

 ஆட்சியர் அலுவலக காயிதேமில்லத் கூட்டரங்கில் நடைப்பெற்ற தேசிய நுகர்வோர்/உலகநுகர்வோர் உரிமைகள் தின நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.இராமமூர்த்தி அவர்களும், வேலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் / நீதிபதி திரு.ஏ.மீனாட்சி சுந்தரம் அவர்களும் சான்றிதழ்களை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி.சுமதி,  மாவட்ட குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் திரு.குமரேஸ்வரன், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 மேலும் காட்பாடி வட்டம், குகையநல்லூர் ஊராட்சியில் பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.12.70  கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் தடுப்பணையை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .  இந்த ஆய்வின் போது மேல்பாலாறு வடிநில கோட்டம் செயற்பொறியாளர் திரு. ரமேஷ்,  காட்பாடி வட்டாட்சியர் திரு. ஜெகன்நாதன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

 அதே போல், கி.வ.குப்பம் ஊராட்சி ஒன்றியம், லத்தேரி ஊராட்சியில் உள்ள குடியிருப்புகளிலிருந்து திடக்கழிவுகளை மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து பெறுவது குறித்து துய்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுரை வழங்கினார்.

 இந்நிகழ்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி.க.ஆர்த்தி, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் திரு. வெங்கட்ராமன், துணை ஆட்சியர் (பயிற்சி) திருமதி.பிரியா, துணை இயக்குநர் (ஊராட்சிகள்),  திரு.ராமகிருஷ்ணன், கி.வ.குப்பம் ஒன்றிய குழு தலைவர் திரு.ரவிச்சந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் திருமதி.சுதா சேகர், ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி.ஜெயா முருகேசன்,  அறங்காவலர் குழு தலைவர் திரு.மகேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.கல்பனா,  ஊராட்சி மன்ற தலைவர் திரு.மோகன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

   இந்நிகழ்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி.க.ஆர்த்தி, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் திரு. வெங்கட்ராமன், துணை ஆட்சியர் (பயிற்சி) திருமதி.பிரியா, துணை இயக்குநர் (ஊராட்சிகள்),  திரு.ராமகிருஷ்ணன், கி.வ.குப்பம் ஒன்றிய குழு தலைவர் திரு.ரவிச்சந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் திருமதி.சுதா சேகர், ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி.ஜெயா முருகேசன்,  அறங்காவலர் குழு தலைவர் திரு.மகேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.கல்பனா,  ஊராட்சி மன்ற தலைவர் திரு.மோகன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

  அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம் செதுவாலை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஏரியின் கரைகளில் உள்ள கருவேலம் மரங்களை அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.